நாட்காட்டி
வருகை
- 194,709 hits
ஆர்.எஸ்.எஸ் ஓடை
-
அண்மைய பதிவுகள்
- சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்
- திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை
- திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்
- இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.
- அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
பிரிவுகள்
குறிச்சொற்கள்
- அகழ்வாய்வு
- அன்ராய்டு செயலி
- அமேசான்.காம்
- அரக்கு பள்ளத்தாக்கு
- அரசியல்
- அருங்காட்சியகம்
- அருவி
- ஆந்திரப் பிரதேசம்
- ஆய் வம்சம்
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறை
- இந்து கோவில்
- இரும்புக்காலம்
- இலக்கணம்
- இலிங்கம்
- உணவு
- கட்டிடக்கலை
- கன்னடம்
- கர்நாடகா
- கல்வி
- கல்வெட்டியல்
- கல்வெட்டுகள்
- கல்வெட்டுக்கள்
- காஃபி
- கிண்டில்
- குடைவரைக் கோவில்
- குழந்தைகள்
- கூகுள் பிளே ஸ்டார்
- கேரளா
- கைபேசி
- கோவில்
- சங்க இலக்கியம்
- சங்க காலம்
- சமணக் குகைத்தளங்கள்
- சமண சமயம்
- சமண தீர்த்தங்கரர்
- சமஸ்கிருதம்
- சிறுவர் கதைகள்
- சிவன்
- சிவலிங்கம்
- சுற்றுலாப்பயணிகள்
- செப்பேடுகள்
- செம்மொழி
- சேரர்கள்
- சோழர்
- தஞ்சாவூர்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்நாடு
- தமிழ் பிராமி
- திருப்பதி
- தொல்பொருட்கள்
- தொல்லியல்
- பல்லவர்
- பாகுபலி
- பாண்டியர்கள்
- பாதாமி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- புத்தர்
- பெரிபுளூஸ்
- பெருங்கற்காலம்
- மகாபாரதம்
- மதுரை
- மலைவாழிடம்
- மாநில தொல்லியல் துறை
- மின்னூல்கள்
- மேலைச் சாளுக்கியர் வம்சம்
- மொழி
- வட்டெழுத்து
- வணிகக் குழுவினர்
- வரலாறு
- விஜயநகரப் பேரரசு
- விஷ்ணு
- ஹம்பி
- ஹைதராபாத்
காப்பகம்
- Follow அகரம் on WordPress.com
கூகுள் மொழிபெயர்
- https://geoloc10.geovisite.ovh/private/geocounter.js?compte=h7f4z7ky9xnt
Please do not change this code for a perfect fonctionality of your counter free visitor counter வருகையாளர்கள்
Monthly Archives: மே 2018
இராமர் பாலம் என்னும் ஆடம்ஸ் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதா?
இராமர் பாலம் = Rama’s Bridge (இராமர் சேது (Rama Setu) என்னும் ஆடம்ஸ் (ஆதாமின்) பாலம் (Adam’s Bridge), மனிதனால் உருவாக்கப்பட்ட, நமது நாகரீகத்தின் மிகப்பழைய, பாலம் ஆகும். இப்பாலம் குடிமுறைப் பொறியியலின் ஒரு வியப்பு (a Civil Engineering Marvel) என்று கருதப்படுகிறது. இராமர் பாலம் மற்றும் ஆடம்ஸ் பாலம் ஆகிய பெயர்கள் முறையே இந்து மற்றும் இஸ்லாமிய புராணங்களில் இருந்து பெறப்பட்ட பெயர்களாகும். இராமர் பாலம் என்னும் பெயர் இந்து இதிகாசமான இராமாயணத்திலிருந்து பெறப்பட்டது. இராமன் கடத்தப்பட்ட தன் மனைவியான சீதாவை மீட்க இலங்கை செல்வதற்காகக் வானரசேனைகளின் உதவியுடன் கட்டிய அணைக்கு இராமர் பாலம் (இராம சேது) என்று பெயர். இதன் காரணமாகவே இராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டது என்று இந்துக்கள் நம்புகிறார்கள். இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் கடல்கூட “சேதுசமுத்திரம்” என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்தப் பாலம் ஸ்ரீராமர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் என வால்மிகியின் ஸ்ரீமத்ராமாயணத்திலும் கம்பராமாயணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்லாமிய புராணத்தின்படி ஆதாம் (Adam), இலங்கையில் ஆதாமின் சிகரத்தை (Adam’s Peak) அடைவதற்கு இந்தப் பாலத்தைப் பயன்படுத்தினார், அங்கு 1,000 ஆண்டுகளுக்கு மனந்திரும்பி நின்றார் (stood in repentance).
பாலம், அல்லது சேது என்பது தற்போது ஒரு தொடர்ச்சியற்ற சங்கிலி மணற்திட்டுகளாகக் காணப்படுகிறது. இந்தப் பாலமானது இந்தியாவின் பாம்பன் (ராமேஸ்வரம்) தீவின் தென்கிழக்கு முனைக்கும், வடமேற்கு இலங்கையில் உள்ள தலைமன்னருக்கும் இடையே கிழக்கு-மேற்கு திசையில் 30 கி.மீ. நீளத்தில் அமைந்திருந்தது. இந்தப் பாலம் பால்க் வளைகுடாவிற்கும் மன்னார் வளைகுடாவிற்கும் இடையே ஒரு புவியியல் பிளவினை உருவாக்கியுள்ளது.
இஃது ஒரு பாலம் அல்ல வெறும் மணல் திட்டுகளே. அலைகளின் சுழற்சியால் இந்தத் திட்டுகள் உருவாக்கி இருக்கலாம் என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது. இராமர் சேது என்பது கட்டுக்கதை என்றும் இராமன் என்ன பொறியியல் வல்லுனரா? அவர் எந்தக் கல்லூரியில் படித்தார் என்றெல்லாம் திரு. மு.கருணாநிதி வாதிட்டார். இராமர் சேது மனிதர்களால் கட்டப்பட்ட பாலம் தான் என்று நாசா விஞ்ஞானிகள் உள்ளிட்ட பல அமெரிக்க விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
இந்தப் பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் சுமார் 7000 ஆண்டுகள் பழமையானவை என்றும் அமெரிக்க சயின்ஸ் சேனல் தெரிவித்துள்ளது. மணல் திட்டுகள் உருவாகியுள்ளது உண்மை என்றாலும் இவை கற்களால் பாலம் அமைக்கப்பட்ட பிறகே உருவாகியிருக்கலாம் என்றும் இத்திட்டுகளின் வயது சுமார் 4000 ஆண்டுகள்தான் என்றும் அமெரிக்க சயின்ஸ் சேனல் கருதுகிறது. இந்தப் பதிவு இது குறித்து விவாதிக்கிறது. Continue reading
Posted in சுற்றுலா, தொல்லியல், வரலாறு
Tagged ஆடம்ஸ் பாலம், இராம சேது, இராமர், இராமர் பாலம், இராமாயணம், இலங்கை, சேதுக்கரை, தனுஷ்கோடி, தலைமன்னார், வரலாறு
14 பின்னூட்டங்கள்
வாழப்பள்ளி மகாதேவர் கோவில் செப்பேடும் மலையாள மொழியின் செம்மொழித் தகுதியும்
இந்தியாவின் மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சகம் (Union Ministry for Culture, Government of India), மலையாள மொழியை இதன் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் செம்மொழி (Classical language) என்று வகைப்படுத்த வல்லுநர் குழு ஒன்றை அமைத்தது. இந்த வல்லுநர் குழு 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 19 நாளன்று அளித்த பரிந்துரையை பண்பாட்டுத் துறை அமைச்சகம் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியது. மத்திய அமைச்சரவை இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு 2013 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் நாளன்று மலையாள மொழியைச் செம்மொழி (Classical language) என்று, வகைப்படுத்தித் தகுதி வழங்கியுள்ளது. வாழப்பள்ளி செப்பேடு வட்டெழுத்தில் பொறிக்கப்பட்ட ஓர் இன்றியமையாத ஆவணம். வாழப்பள்ளி மகாதேவர் கோவில் பற்றிய ஒரு தீர்ப்பாணையும் (decree), திருவாற்றுவையைச் சேர்ந்த சிலரிடையே ஏற்பட்ட உடன்படிக்கையும் ஆகும். இந்தத் தீர்ப்பனையை இரண்டாம் சேரப் பேரரசின் / குலசேகரப் பேரரசின் அரசரான இராஜசேகர வர்மா வெளியிட்டுள்ளார். இந்தச் செப்பேடு எவ்வாறு மலையாளம் செம்மொழி தகுதி பெற உதவியது என்பது பற்றி இந்தப்பதிவு விவரிக்கிறது.
Continue reading
Posted in கேரளா, தொல்லியல், மலையாளம், மொழி
Tagged கல்வெட்டுகள், குலசேகரப் பேரரசு, கேரளா, செம்மொழி, சேரர்கள், மலையாளம், வரலாறு, வாழப்பள்ளி
7 பின்னூட்டங்கள்
பாதாமி: புத்தர் குகைத்தளம், அனந்தசயன விஷ்ணு கோவில், கப்பெ அரபட்டா கல்வெட்டு
பாதாமியில் நாம் கண்ட இந்த நான்கு குடைவரைக் கோவில்களைத் தவிர, வேறு சில இயற்கைக் குகைகளும் இடைக்காலத்தைச் சேர்ந்த கற்கோவில்களும் உள்ளன. முன்பு நாம் பார்த்த அகஸ்தியர் தீர்த்த குளத்தையொட்டி கிழக்குத் திசையில் பூதநாதா கோவில்களின் தொகுதியின் அருகே கி.பி. 7 – 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறிய அளவில் அமைந்த சாளுக்கியர் காலத்து இயற்கைக் குகைத் தளம் ஒன்று காணப்படுகிறது. இதனை அடுத்து ஒரு சிறிய கோவில் ஒன்று அனந்தசயன விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனந்தசயன விஷ்ணு பாம்பணையில் சயனித்த நிலையில் புடைப்புச் சிற்பமாகக் காட்டப்பட்டுள்ளார். பூதநாதா தீர்த்தக் குளத்திற்குப் போகும் வழியில் மணற்பாறை ஒன்றில் வராஹர், கணேசர், மும்மூர்த்திகள், மகிஷாசுரமர்த்தினி, நரசிம்மர் ஆகியோர் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளனர். பாதாமியின் வடக்குக் கோட்டைப் படிக்கட்டையொட்டி சற்றுத் தொலைவில் செங்குத்தான பாறையில் கப்பெ அரபட்டா (Kappe Arabhatta) என்ற பெயருடன் கன்னடக் கல்வெட்டு செய்யுள் பொறிக்கப்பட்டுள்ளது. Continue reading
Posted in தொல்லியல், பெளத்த சமயம், மதம்
Tagged அனந்தசயன விஷ்ணு, கன்னடம், கப்பெ அரபட்டா கல்வெட்டு, பாதாமி, புத்தர், பெளத்தம், விஷ்ணு
12 பின்னூட்டங்கள்