Daily Archives: திசெம்பர் 2, 2018

தமிழகத்தின் இரும்புக் காலம்: 2 இரும்பு உருக்காலைத் தொழில் நுட்பமும் இரும்பின் பயன்பாடும்

உலகப் புகழ்[பெற்ற வூட்ஸ் எஃகு என்ற டமாஸ்கஸ் எஃகு பண்டைய சேரநாட்டில் தயாரிக்கப்பட்டது பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இரண்டாம் பதிவில் சேரநாட்டின் தலைநகராகக் கருதப்பட்ட கருவூருடன் ரோமாபுரி நாட்டு வணிகர்கள் கொண்டிருந்த தொடர்பு சங்க இலக்கியம்,  தொல்லியல், கல்வெட்டியல் மற்றும்  நாணயவியல் சான்றுகளின் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது பற்றிக் கூறியுள்ளேன்.

இரும்புக் காலம் மற்றும் தொடக்க வரலாற்றுக் காலகட்டத்தைச் சேர்ந்த கொடுமணல், ஆதிச்சநல்லூர், மேல்சிறுவாளூர், குட்டூர், பொற்பனைக்கோட்டை, அரிக்கமேடு, மோதூர், பேரூர் போன்ற தமிழகத் தொல்லியல் களங்களில் மேற்கொள்ளப்பட்ட இரும்பு பிரித்தெடுத்தல் (Iron Extraction), வார்ப்பிரும்பு (Cast Iron), தேனிரும்பு (Wrought Iron), எஃகு (Steel) போன்ற கார்பன் மிகுந்த / சமன்படுத்தப்பட்ட இரும்புக் கலவைகளின் (High Carbon Iron Alloys) உற்பத்தி முறைகள், பண்புகள் பற்றி இந்த இரண்டாம் பதிவில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. பல தொல்லியல் களங்களில் பயன்படுத்தப்பட்ட புடக்குகை (மூசை) உலை (Crucible Furnace), இரும்பு உருக்கும் உலை (Iron Smelting Furnace) போன்ற உலைகள் பற்றியும், கரியூட்டம் (Carbonization / Carburizing), கரிநீக்கம் (Decarbonization) போன்ற சுத்திகரிப்பு செயலாக்க நுட்பங்கள் (Purification Processing Techniques) பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. முனைவர்.சசிசேகரன், பி மற்றும் பேரா.சாரதா ஸ்ரீநிவாசன் போன்ற தொல்பொருள் உலோகவியல் வல்லுனர்கள் (Archaeometallurgists) மேற்கொண்ட கள ஆய்வுகள் மற்றும் சோதனைக்கூட ஆய்வுகளில் சோதித்தறிந்த உலோக மாதிரிகளின் பண்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. Continue reading

Posted in தமிழ், தமிழ்நாடு, வரலாறு | Tagged , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்