நாட்காட்டி
வருகை
- 197,702 hits
ஆர்.எஸ்.எஸ் ஓடை
-
அண்மைய பதிவுகள்
- சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்
- திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை
- திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்
- இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.
- அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
பிரிவுகள்
குறிச்சொற்கள்
- அகழ்வாய்வு
- அன்ராய்டு செயலி
- அமேசான்.காம்
- அரக்கு பள்ளத்தாக்கு
- அரசியல்
- அருங்காட்சியகம்
- அருவி
- ஆந்திரப் பிரதேசம்
- ஆய் வம்சம்
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறை
- இந்து கோவில்
- இரும்புக்காலம்
- இலக்கணம்
- இலிங்கம்
- உணவு
- கட்டிடக்கலை
- கன்னடம்
- கர்நாடகா
- கல்வி
- கல்வெட்டியல்
- கல்வெட்டுகள்
- கல்வெட்டுக்கள்
- காஃபி
- கிண்டில்
- குடைவரைக் கோவில்
- குழந்தைகள்
- கூகுள் பிளே ஸ்டார்
- கேரளா
- கைபேசி
- கோவில்
- சங்க இலக்கியம்
- சங்க காலம்
- சமணக் குகைத்தளங்கள்
- சமண சமயம்
- சமண தீர்த்தங்கரர்
- சமஸ்கிருதம்
- சிறுவர் கதைகள்
- சிவன்
- சிவலிங்கம்
- சுற்றுலாப்பயணிகள்
- செப்பேடுகள்
- செம்மொழி
- சேரர்கள்
- சோழர்
- தஞ்சாவூர்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்நாடு
- தமிழ் பிராமி
- திருப்பதி
- தொல்பொருட்கள்
- தொல்லியல்
- பல்லவர்
- பாகுபலி
- பாண்டியர்கள்
- பாதாமி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- புத்தர்
- பெரிபுளூஸ்
- பெருங்கற்காலம்
- மகாபாரதம்
- மதுரை
- மலைவாழிடம்
- மாநில தொல்லியல் துறை
- மின்னூல்கள்
- மேலைச் சாளுக்கியர் வம்சம்
- மொழி
- வட்டெழுத்து
- வணிகக் குழுவினர்
- வரலாறு
- விஜயநகரப் பேரரசு
- விஷ்ணு
- ஹம்பி
- ஹைதராபாத்
காப்பகம்
- Follow அகரம் on WordPress.com
கூகுள் மொழிபெயர்
- https://geoloc10.geovisite.ovh/private/geocounter.js?compte=h7f4z7ky9xnt
Please do not change this code for a perfect fonctionality of your counter free visitor counter வருகையாளர்கள்
Monthly Archives: செப்ரெம்பர் 2020
திரிபுனித்துரா மலை மாளிகை (அரண்மனை) மற்றும் அருங்காட்சியகம்
திரிபுனித்துரா மலை மாளிகை (கனக்கக்குன்னு அரண்மனை), கி.பி. 1855 ஆம் ஆண்டு முதல், முந்தைய கொச்சி அரசர்களின் அரசவையாகவும் வாழ்விடமாகவும் (Royal Court and Official Residence) திகழ்ந்தது. பெரும்படப்பு ஸ்வரூபம் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் கொச்சி அரசமரபினர் மகோதயபுரம் பெருமாள்களின் (பிற்காலச் சேரர்களின்), தாய்வழி வாரிசுரிமை முறையின்படி வந்த வழித்தோன்றல்கள் ஆவர். இந்த மாளிகையின் பழைய கட்டமைப்புகள் கி.பி. 1853 மற்றும் 1864 ஆம் ஆண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டதாகும். கேரளாவின் கொச்சி நகரின் புறநகர்ப் பகுதியான திரிபுனித்துராவில் கனக்கக்குன்னு என்ற குன்றின் மீது அமைந்துள்ள இந்த மாளிகை, தற்போது கேரள மாநில தொல்லியல் துறையால் சீரமைக்கப்பட்டு, நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் முழு அளவிலான பண்பாடு மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் (Ethno-Archaeological Museum) செயல்பட்டுவருகிறது. தொன்மை மிக்க இந்த அரச மாளிகையை ஒரு அரும்பொருள் களஞ்சியம் என்று கூறலாம்.
வரலாற்றுக்கு முந்தைய காலத்துப் பூங்கா, மான் பூங்கா, கலாச்சார அருங்காட்சியகம், ஆகிய பல வசதிகளை உள்ளடக்கிய இந்த சுற்றுலாத் தலத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். புகழ்பெற்ற மலையாள திரைப்படமான மணிச்சித்ரத்தாழு இங்கே படமாக்கப்பட்டது. இதுமட்டுமின்றி பல்வேறு திரைப்படங்களும் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.
Posted in கேரளா, சுற்றுலா, வரலாறு
Tagged அரண்மனை, அருங்காட்சியகம், கேரளா, கொச்சி, சேரர்கள், திரிப்பணித்துரா, தொல்பொருட்கள், மாநில தொல்லியல் துறை
2 பின்னூட்டங்கள்
ஆளும்மூட்டில் மாளிகை: மணிச்சித்ரத்தாழு மலையாளத் திரைப்படத்திற்கான கதைக்கரு வழங்கிய பேய் மாளிகை
‘ஆளும்மூட்டில் மேடா,’ என்ற தறவாட்டு மாளிகையின் (பண்டைய கேரளாவின் பாரம்பரிய வீடு) (Tharavad), காரணவர் பொறுப்பிலிருந்த கொச்சு குஞ்சு சாணார் என்ற ஈழவ நிலச்சுவான்தார் அவருடைய மருமகனால் படுகொலை செய்யப்படுகிறார். திருவிதாங்கூர் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், நிகழ்ந்த கொடூரமான படுகொலையும், பேய் நடமாட்டம் உள்ளதாக நம்பப்படும் மர்ம மாளிகையும் ஒரு பிரபல மலையாளப் படத்தின் திரைக்கதையாகப் புனையப்பட்டுள்ளது. மது முட்டம் (Madhu Muttom) என்ற திரைக்கதை ஆசிரியர் எழுதி, ஃபாசிலின் இயக்கத்தில் படமாக்கப்பட்ட ‘மணிசித்திரதாழு’ என்ற உளவியல் அடிப்படையிலான மலையாளத் திகில் திரைப்படம், இங்கு நடைபெற்ற மர்மமும் சோகமும் நிறைந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். Continue reading
Posted in கேரளா, மலையாளம், வரலாறு
Tagged ஆளும்மூட்டில் மேட, தறவாட், திருவாங்கூர் சமஸ்தானம், மேட
பின்னூட்டமொன்றை இடுக
இரணியல் அரண்மனை: அழிவின் விளிம்பில் வேணாடு சேரர்களின் அரண்மனை
சேரமான் பெருமாள் என்ற வேணாட்டுச் சேர மன்னர் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கட்டிய அரண்மனை மற்றும் கோட்டை கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் கிராமத்தில் அமைந்துள்ளது. தற்போதைய பத்மநாபபுரம் அரண்மனையைப் போலக் கட்டப்பட்ட மரத்தாலான அரண்மனை, பிற்காலத்தில் ஓடு வேயப்பட்டுள்ளது. படிப்புரா, குதிரமாளிகா, வசந்தமண்டபம் ஆகிய மூன்று பகுதிகள் இந்த அரண்மனையில் காணப்படுகின்றன.வசந்தமண்டபத்தின் பள்ளியறையில் பளிங்கில் செதுக்கப்பட்ட கட்டில் பலரையும் கவர்ந்து வருகிறது. ஓடு வேய்ந்த இரட்டைத் தளக் கட்டடங்கள் சிதைந்து போய்விட்டன. பலர் மரங்களைத் திருடிச் சென்றுவிட்டனர். கி.பி. 1601 ஆம் ஆண்டு சேரமான் பெருமாள் வம்சத்தினர் பத்மநாபபுரத்திற்குத் தலைநகரை மாற்றியதால் இரணியல் அரண்மனை சிதைந்து, புதர் மண்டி ஆழிந்து வருகிறது. Continue reading