Category Archives: கேரளா

இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.

இரண்டாம் சேர குலமரபில் வந்த அரசர்கள் பெருமாள்கள் (Perumals) என்றும் சில சமயங்களில் குலசேகரர்கள் (Kulasekharas) என்றும் அழைக்கப்பட்டனர். இரண்டாம் சேர வம்சத்தவர்களின் அரசு (second Chera kingdom) நிறுவப்பட்டு, கி.பி 9 ஆம் நூற்றாண்டில், பெருமாள் அரசர்களின் ஆட்சி (rule of the Perumals) தொடங்கியது. மகோதயபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த குலசேகரர்களின் ஆட்சி சேரர் (கேரள) வரலாற்றில் பொற்காலமாகக் கருதப்படுகிறது. புகழ்பெற்ற இந்தப் பெருமாள் குல அரசர்கள் கி.பி 800 முதல் கி.பி 1124 வரை அன்றைய சேரநாட்டை ஆண்டு வந்ததாகக் கருதப்பட்டது. எலம்குளம் பி.என். குஞ்சன் பிள்ளை மற்றும் எம். ஜி. எஸ். நாராயணன் போன்றவர்கள் இடைக்காலச் சேரர்களின் வரலாற்றைப் பல்வேறு கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளனர். மகோதயபுரம் குலசேகரர்களின் ஆட்சிக்காலம் குறித்த வரலாறு, அறிஞர்களிடையே வாதவிவாதப் பொருளாக இருந்து வருகிறது. Continue reading

Posted in கேரளா, சேரர்கள், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

பார்த்திவசேகரபுரம் செப்பேடு: ஆய் மன்னன் கோகருந்தடக்கன் நிறுவிய பார்த்தசாரதி கோவிலும் சாலையும் (குருகுலமுறை உயர்கல்வி நிறுவனம்)

பார்த்திவசேகரபுரம் பார்த்தசாரதி கோவில் (விஷ்ணுவின் கிருஷ்ண அவதாரம்), தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை வட்டம், பார்த்திவபுரத்தில் அமைந்துள்ளது. ஆய்குல மன்னன் கருநந்தடக்கன் என்னும் கோகருநந்தடக்கன் (கி.பி. 857–885) 28 ஆண்டுகள் ஆட்சி செய்தான். இம்மன்னன் முஞ்சிறை கோவில் ஊராளர் சபையினரிடம் நெல் வயலுக்கு ஈடாகக் கொடுத்து பரிவர்த்தனை வாயிலாகக் கோவில் கட்டுவதற்காகப் பெற்ற நிலத்தில், கி.பி. 857 ஆம் ஆண்டு, பார்த்தசாரதிக்குக் கோவில் கட்டினான். “ஸ்ரீ வல்லபன்”, “பார்த்திவசேகரன்” ஆகிய பட்டங்களைச் சூடிக்கொண்டிருந்த கோகருநந்தடக்கன், இந்த கிராமத்திற்கு பார்த்திவசேகரபுரம் என்று தன் பட்டப்பெயரையே சூட்டினான். காந்தளூர் சாலை சட்டதிட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு தொண்ணூற்றைந்து சட்டர்க்கு (மாணவருக்கு) ஒரு சாலையையும் (குருகுலமுறை உயர்கல்வி நிறுவனம்) உருவாக்கினான். வேதப் பயிற்சி தவிர, ஆயுதப் பயிற்சியும் இங்கு வழங்கப்பட்டது. கோவில் மற்றும் சாலை ஆகியவற்றை அமைத்த பின்னர், அவை முறையாக நடைமுறைப் படுத்துவதற்காக இம்மன்னன் திட்டமிட்டு உருவாக்கிய நிர்வாக விதிமுறைகள் ஹுஸுர் அலுவலக (பார்த்திவபுரம்) செப்பேட்டில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் சாலைகள் (கல்வி நிறுவனங்கள்) எவ்வாறு செயல்பட்டன என்பதை இச்செப்பேட்டில் இருந்து அறியலாம்.
Continue reading

Posted in கற்பிக்கும் கலை, கல்வி, கேரளா, சமஸ்கிருதம், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

வரலாற்றில் விழிஞம்: பண்டைய துறைமுக நகரத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்

விழிஞம் அரபிக் கடற்கரையில், கலங்கரை விளக்கமும் இயற்கைத் துறைமுகமும் கொண்ட ஒரு சிறிய மீன்பிடி கிராமம் ஆகும். பிரபல சுற்றுலாத் தலமான கோவளம் கடற்கரை அருகே விழிஞம் அமைந்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழிஞம் துறைமுகம் கிழக்கு மேற்கு வணிக வழியின் முக்கியமான இடத்தில் அமைந்திருந்தது. இடைக்காலத் தமிழ் கல்வெட்டு, விழிஞத்தை மலைநாட்டின் தலைநகராகக் குறிப்பிடுகிறது, மேலும் இவ்வூர் விலின்டா (Vilinda), விலினம் (Vilinam) அல்லது விலூனம் (Vilunum) என்றெல்லாம் அழைக்கப்பட்டது. சோழர்கள் இவ்வூரைக் கைப்பற்றியதும், இராஜேந்திர சோழபட்டினம் என்றும் குலோத்துங்க சோழபட்டினம் என்றும் பெயர் மாற்றம் செய்தனர். இந்த நகரத்தைக் கைப்பற்றுவதற்காகவே, கி.பி. 8 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே, ஆய், சேரர், பாண்டியர் மற்றும் சோழ அரசர்களிடையே பல போர்கள் நிகழ்ந்தன. ஆய் வம்சத்தினர் இப்பகுதியில் தங்கள் அரசை முதன்முதலாக நிறுவியிருந்தனர்.

கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆய் வம்சத்தின் கோட்டையைக் கண்டறிவதற்காக, அண்மையில் விழிஞத்தைச் சுற்றி தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வின் மூலம் அரிய தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது விழிஞம் இந்தியாவின் எதிர்கால நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது. விழிஞம் பன்னாட்டுத் துறைமுகம் தற்போது கட்டுமானத்தில் உள்ளது. இத்துறைமுகக் கட்டுமானங்களை அதானி போர்ட்ஸ் லிமிடெட் கட்டிவருகிறது.
Continue reading

Posted in குடைவரைக் கோவில், கேரளா, வரலாறு | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்