Category Archives: தமிழ்நாடு

தமிழகத்தின் இரும்புக் காலம்: 2 இரும்பு உருக்காலைத் தொழில் நுட்பமும் இரும்பின் பயன்பாடும்

உலகப் புகழ்[பெற்ற வூட்ஸ் எஃகு என்ற டமாஸ்கஸ் எஃகு பண்டைய சேரநாட்டில் தயாரிக்கப்பட்டது பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இரண்டாம் பதிவில் சேரநாட்டின் தலைநகராகக் கருதப்பட்ட கருவூருடன் ரோமாபுரி நாட்டு வணிகர்கள் கொண்டிருந்த தொடர்பு சங்க இலக்கியம்,  தொல்லியல், கல்வெட்டியல் மற்றும்  நாணயவியல் சான்றுகளின் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது பற்றிக் கூறியுள்ளேன்.

இரும்புக் காலம் மற்றும் தொடக்க வரலாற்றுக் காலகட்டத்தைச் சேர்ந்த கொடுமணல், ஆதிச்சநல்லூர், மேல்சிறுவாளூர், குட்டூர், பொற்பனைக்கோட்டை, அரிக்கமேடு, மோதூர், பேரூர் போன்ற தமிழகத் தொல்லியல் களங்களில் மேற்கொள்ளப்பட்ட இரும்பு பிரித்தெடுத்தல் (Iron Extraction), வார்ப்பிரும்பு (Cast Iron), தேனிரும்பு (Wrought Iron), எஃகு (Steel) போன்ற கார்பன் மிகுந்த / சமன்படுத்தப்பட்ட இரும்புக் கலவைகளின் (High Carbon Iron Alloys) உற்பத்தி முறைகள், பண்புகள் பற்றி இந்த இரண்டாம் பதிவில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. பல தொல்லியல் களங்களில் பயன்படுத்தப்பட்ட புடக்குகை (மூசை) உலை (Crucible Furnace), இரும்பு உருக்கும் உலை (Iron Smelting Furnace) போன்ற உலைகள் பற்றியும், கரியூட்டம் (Carbonization / Carburizing), கரிநீக்கம் (Decarbonization) போன்ற சுத்திகரிப்பு செயலாக்க நுட்பங்கள் (Purification Processing Techniques) பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. முனைவர்.சசிசேகரன், பி மற்றும் பேரா.சாரதா ஸ்ரீநிவாசன் போன்ற தொல்பொருள் உலோகவியல் வல்லுனர்கள் (Archaeometallurgists) மேற்கொண்ட கள ஆய்வுகள் மற்றும் சோதனைக்கூட ஆய்வுகளில் சோதித்தறிந்த உலோக மாதிரிகளின் பண்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. Continue reading

Posted in தமிழ், தமிழ்நாடு, வரலாறு | Tagged , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

புள்ளலூர்: காஞ்சிபுரம் அருகே ஒரு குக்கிராமத்தில் நடைபெற்ற மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க போர்கள் 2

பல்லவ சாளுக்கியப் போர் நடந்த அதே புள்ளலூர் கிராமத்தில் 1,161 ஆண்டுகளுக்குப் பின்பு மைசூர் சுல்தானகத்திற்கும்  (Sultanate of Mysore) பிரிட்டானிய கிழக்கு இந்தியக் கம்பெனிக்கும் இடையே கி.பி. 1780 ஆம் ஆண்டிலும் கி.பி. 1781 ஆண்டிலும் ஆக இரண்டு காலகட்டங்களில் நடந்த போர் இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் என்று பெயர் பெற்றது.  

மேஜர் ஜெனரல் சர் ஹெக்டர் மன்றோவின் தலைமையில் ஓர் ஆங்கிலேயப்படை மதராசிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி முன்னேறியது. கர்னல் வில்லியம் பெய்லியின் தலைமையில் ஒரு கூடுதல் படை, ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூரிலிருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்றது. 1780 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி புள்ளலூரில் கர்னல் பெய்லியின் படையை ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் தங்கள் படைகளுடன் வழிமறித்து இரு வேறு பிரிவாகத் தாக்கினர். இந்தத் தாக்குதலால் ஆங்கிலேயப்படை நிலைகுலைந்து பலத்த சேதத்திற்கு உள்ளானது. கர்னல் பெய்லி சிறைப்பிடிக்கப்பட்டு ஸ்ரீரங்கப்பட்டணம் நிலவறைச் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டு மரணித்தார்.

இன்று ஆகஸ்டு 27, 2018 செவ்வாய்க்கிழமை. இன்றைக்குச் சரியாக 237 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1781 ஆம் ஆண்டு இதே ஆகஸ்டு மாதம் 27 ஆம் தேதியன்று, ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியும் மைசூர் சுல்தானகப் படையும் புள்ளலூரில் இரண்டாம் கட்டமாக (ஆங்கிலேய மைசூர்) போரில் ஈடுபட்டனர். இப்போரில் மரணம் எய்திய இரண்டு ஆங்கிலேய அதிகாரிகளின் (கேப்டன் ஜேம்ஸ் ஹிஸ்லப் மற்றும் லெப்ட். கர்னல் ஜார்ஜ் பிரௌன்) நினைவைப் போற்றும் வகையில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி புள்ளலூரில் இரண்டு சதுரக்கூம்பகத் தூண்களை (TWO OBELISKS) நிறுவியது. இப்பகுதியை உள்ளூர் மக்கள் கோரித்தோப்பு என்றும் நினைவிடத்தைக் கோரிமேடு என்றும் அழைக்கின்றனர். இத்தலைப்பில் முதலாம் பதிவைத் தொடர்ந்து இந்த இரண்டாம் பதிவு புள்ளலூரில் நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர்களைப் பற்றி விவரிக்கிறது. Continue reading

Posted in தமிழ்நாடு, தொல்லியல், வரலாறு, Uncategorized | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

புள்ளலூர்: காஞ்சிபுரம் அருகே ஒரு குக்கிராமத்தில் நடைபெற்ற மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க போர்கள் 1

மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க போர்கள் நிகழ்ந்துள்ள இடம் என்பதற்கான அறிகுறி சற்றும் இல்லாமல் அமைதியாகக் காட்சியளிக்கிறது புள்ளலூர் என்ற பொள்ளிலூர் கிராமம். இரத்தமும் இரணமும் தோய்ந்த இந்த மண் பல்லவர் காலத்துப் புகழ்பெற்ற போர்க்களமாகும். பல்லவ சாளுக்கியப் போர் நடந்த இதே குக்கிராமத்தில் 1,161 ஆண்டுகளுக்குப் பிறகு மைசூர் சுல்தானகத்திற்கும் (Sultanate of Mysore) கிழக்கு இந்திய கம்பெனிக்கும் இடையே கி.பி. 1780 ஆம் ஆண்டிலும் கி.பி. 1781 ஆம் ஆண்டிலும் ஆக இரண்டு காலகட்டங்களில் நடந்த போர் இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் என்று பெயர் பெற்றது. புள்ளலூர் கிராமத்தில் கைலாசநாதர் கோவிலும் இராகவப் பெருமாள் கோவிலும் புகழ் பெற்றவை. இங்கு சில கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பெருமாள் கோவில் விமானத்தின் செங்கற் கட்டுமானம்  சிதைவுற்று சரிந்து இடிந்து போனது. தற்போது புதிய கோவில் வழிபாட்டில் உள்ளது. இந்தப் பதிவு கி.பி. 619 ஆம் ஆண்டு இதே புள்ளலூர் கிராமத்தில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனுக்கும் மேலைச்சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கும் இடையே நடைபெற்ற பல்லவ சாளுக்கியப் போர் பற்றியும் புள்ளலூர் கோவில்களைப் பற்றியும் விவரிக்கிறது.
Continue reading

Posted in கோவில், தமிழ்நாடு, தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , | 17 பின்னூட்டங்கள்