Category Archives: நுண்கலை

பட்ட சித்ரா, தாலபட்ட சித்ரா: ஒரிசாவின் பாரம்பரிய ஓவியக்கலை

பட்ட சித்ரா (Odiya: ପଟ୍ଟା ଚିତ୍ର) என்பது ஒரு பழங்காலக் கலை வடிவம் . இந்த வடிவம் கிழக்கு இந்திய மாநிலமான ஒடிஸாவின் பாரம்பரிய கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்த ஓவியக்கலையாகும். சமஸ்கிருத மொழியில் “பட்டா” (Sanskrit: पत्ता) என்றால் “துணி” (canvas) என்று பொருள்; “சித்ரா” (Sanskrit: चित्र ) என்பதன் பொருள் “படம்” என்பதாகும். பட்ட சித்ரா என்றால் துணியில் வரையப்படும் பாரம்பரியமிக்கச சுருள் ஓவியத்தைக் (scroll paintings) குறிக்கும் ஒரு பொதுவான சொல் எனலாம். பட்டா சித்ராவின் தோற்றம் மிகவும் சுவாரஸ்யமானது பண்டைய காலங்களில், எழுத்துத் தொடர்புக்குக் காகிதங்கள் பயன்படுத்தப்படவில்லை என்பது நமக்குத் தெரியும். பனை ஓலைகளை எழுத்துவதற்குப் பயன்படுத்தினார்கள். தொடக்கக் காலங்களில், பனை ஓலைகளில் செய்திகளை மட்டுமே அனுப்பினார்கள். இதன் பிறகு செய்திகளுடன் விளக்கப் படங்களையும் சேர்த்துக் கொண்டார்கள். அடுத்து விரைவிலேயே இந்த விளக்கப்படங்கள் பட்ட சித்ரா என்னும் அற்புதமான கலை வடிவமாக மாற்றம் கண்டது.
Continue reading

Posted in நுண்கலை, வாழ்க்கை முறை | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கலம்காரி கலை

பேனாவைக் கொண்டு துணியில் அலங்கரிக்கும் ‘கலம்காரி’ (English: Kalamkari), (தெலுங்கு: కలంకారి) ஒரு தொன்மையான கலைப்பாணியாகும். பாரசீக மொழியில் “கலம்” என்றால் பேனா என்றும் “காரி” என்றால் கலைவடிவம் என்றும் பொருள்படும். கலம்காரி என்ற சொல் இயற்கையாகக் கிடைக்கும் தாவரச் சாயத்தைப் பயன்படுத்தி அழகிய வடிவங்களைக் (patterns) கையால் வரைந்தோ (free-hand painting) அல்லது அச்சுப் பதித்தோ (block-printing) தயாரிக்கப்படும் பருத்தித் துணிகளைப் பற்றி விவரிக்கிறது. தற்போது கலம்காரித் துணி வகை என்பது இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலிருந்து தயாராகும் துணிவகைகளையும் உள்ளடக்கியதாகும். குறிப்பாகக் கலம்காரி என்ற சொல் தென்னிந்திய மாவட்டங்களில் தயாராகும் துணிகளை மட்டும் சுட்டிக்காட்டுகிறது. இந்தப்பதிவு கலம்காரி பாணி ஓவியங்கள் பற்றியும், பருத்தித்துணியில் கையால் வரைந்தோ அல்லது அச்சுப் பதித்தோ தயாரிக்கப்படும் தொழில்நுட்பம் பற்றியும் விவரிக்கிறது. Continue reading

Posted in நுண்கலை, வாழ்க்கை முறை | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்