Category Archives: மருத்துவம்

நாம் உண்ணும் உணவு நம் உடலில் எப்படி செரிமானம் ஆகிறது?

நமது செரிமான மண்டலம் ஒரு விந்தையான உறுப்பு எனலாம். உதட்டிலிருந்து தொடங்கி ஆசனவாயில் வரை நீளும் நமது செரிமான மண்டலத்தின் நீளம் எவ்வளவு தெரியுமா? சுமார் இருபத்தெட்டு அடி நீளம் கொண்ட செரிமான பாதை (Digestive Tract) ஆகும். உணவு மற்றும் திரவங்கள் இந்த செரிமானப் பாதை வாயிலாகக் கடந்து சென்று செரித்த பின்னர் சத்துக்களாக மாற்றப்பட்டு இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன. இப்பாதையின் வாயிலாகவே கழிவுகளும் அகற்றப்படுகிறது. Continue reading

Posted in உடல் நலம், உணவு, மருத்துவம், லைப் ஸ்டைல் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடல் கொழுப்பு: எவ்வாறு கெட்ட கொழுப்பை இழப்பது நல்ல கொழுப்பைப் பெருக்குவது?

கொழுப்பு பற்றி நாம் மோசமான கருத்தே கொண்டுள்ளோம் என்றாலும், கொழுப்பு என்பது உடலின் இயக்கத்திற்குத் தேவையான இன்றியமையாத பெரு ஊட்டச்சத்து ஆகும். உடல் நலத்தைச் சிறந்த முறையில் பராமரிக்கச் சரியான அளவில், சரியான வடிவில் கொழுப்பு உணவை உண்ண வேண்டும் என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள் (saturated fatty acids), செறிவற்ற கொழுப்பு அமிலங்கள் (unsaturated fatty acids) என்று இரண்டு வகைக் கொழுப்பு அமிலங்களால் விளையும் நன்மை தீமை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

ட்ரை கிளிசரைடு, கொலஸ்ட்ரால், ஆகிய கொழுப்புகள் மனித உடலில் காணப்படுகின்றன. கல்லீரல் இவற்றை எவ்வாறு உற்பத்தி செய்கிறது? ட்ரை கிளிசரைடு எப்படிக் கொழுப்பாக நம் உடலில் தேங்கி, நாம் குண்டாகிறோம்? எது கெட்ட கொலஸ்ட்ரால்? எது நல்ல கொலஸ்ட்ரால்? இவை நம் உடலில் எந்த அளவு இருக்க வேண்டும்? கெட்ட கொழுப்பை நீக்க என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும்? என்னென்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும்? இந்தக் கேள்வுகளுக்கான விடையினைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இந்தப் பதிவு உங்களுக்கு விடை தருகிறது. படித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் எழுதுங்கள். Continue reading

Posted in உடல் நலம், உணவு, மருத்துவம், வாழ்க்கை முறை | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

உங்கள் குழந்தையைத் தெரிந்துகொள்ளுங்கள் 5

நமது மூளையைப் பற்றிய பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நமக்கு மிகுந்த ஆச்சர்யத்தைத் தருகின்றன. கிறிஸ்து பிறப்பிற்கு முன்பு கிரேக்க இலத்தீனிய தத்துவ ஞானிகள் பலவாறான யூகங்களை வெளிப்படுத்தினார்கள். கி.பி. ஆறு மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் மூளைபற்றிய ஆய்வுகள் மந்த கதியில் நடந்தன. பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஆய்வுகள் துரித கதியில் நிகழ்ந்தன. இருபதாம் நூற்றாண்டு நவீன மருத்துவம் கம்ப்யூட்டர் நுட்பங்களை உள்ளடக்கிய பலகருவிகளைப் பயன்படுத்தி வாழும் மூளையின் செயல்பாடுகள் கண்டறியப்பட்டன.    மேலை நாடுகளில் பல ஆராய்சி நிறுவனங்களில் , பல்கலைக்கழகங்களில், ஆய்வுத் திட்டங்களில்  நடைபெற்ற மூளை ஆராய்சியில் பல சிக்கலான கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளன.  இப்பதிவில் நமது மூளையைப்பற்றி கடந்த காலத்தில் மேற்கொண்ட சுவையான ஆய்வுகள் பற்றிக் காண்போமா? Continue reading

Posted in உளவியல், கற்பிக்கும் கலை, நரம்பியல், மருத்துவம் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக