Tag Archives: அழகர்கோயில்

அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்

‘அழகர் கோயில்’ என்னும் பண்பாட்டாய்வு நூலை, பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் எழுதி வெளியிட்டுள்ளார். மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் பதிப்புத்துறையால் வெளியிடப்பட்ட இந்நூல் இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடாகும். துறைவளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1976 – 79 ஆம் ஆண்டுகளில் அழகர் கோயில் குறித்து மேற்கொண்ட கள ஆய்வுகள், ஆய்வேடாகச் சமர்ப்பிக்கப்பட்டது.

அழகர்கோயில் குறித்த ஆய்வு குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டார்களின் வழிபாட்டுச் சடங்குகளையும், நம்பிக்கைகளையும், செவிவழிக் கதைகளையும், வர்ணிப்புப் பாடல்களையும் பண்பாட்டுக் கூறுகளாகப் பார்க்கும் ஆய்வு முறைமை வரலாற்றாய்விற்குப் புதியது. கோயில் சமூகத்தோடு கொண்டிருந்த தொடர்பு குறிப்பிட்ட சாதிகளை முன்னிறுத்தி ஆராயப்பட்டது. மண்ணின் வரலாற்றையும், பண்பாட்டின் வரலாற்றையும் இணைத்துக் கோயில் வரலாற்றாய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வு முறைமை புதுமையானதும் முழுமையானதும் ஆகும். கோயில் ஆய்வுகளுக்கு, பேராசிரியர். தொ.பரமசிவன் அவர்கள் மேற்கொண்ட இந்தக் கள ஆய்வு முன்னோடியாகத் திகழ்கிறது. Continue reading

Posted in கோவில், தமிழ்நாடு, நூலறிமுகம், விழாக்கள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கள்ளழகர் கோயில், அழகர் கோயில்

மதுரை நகரைச் சுற்றி இயற்கை எழில் நிறைந்த இடங்கள் என்று அழகர்கோயில், புல்லூத்து, நாகதீர்த்தம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். படிக்கும் காலத்தில் அழகர்கோயிலுக்கு நான் அடிக்கடி சென்று வந்ததுண்டு. காலையில் பஸ் பிடித்து அழகர்கோயிலுக்குச் சென்று கோயில், மலை எல்லாம் சுற்றிவிட்டு மாலையில் வீடு திரும்பியதுண்டு. அப்போது அவ்வளவு கூட்டம் இல்லை; மரங்களடர்ந்த காடுகள், எங்கும் பசுமையான சூழல். ஓங்கி உயர்ந்த கோபுரம், அழகிய சிற்பங்கள் நிறைந்த மண்டபத்தூண்கள், இன்றும் அழகுறக் காட்சியளிக்கும் ஓவியங்கள், பதினெட்டாம்படிக்கருப்புக்கு பயபக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்தும் கிராமத்து மனிதர்கள், திவ்யதேச பெருமாளை சேவிக்கும் வைணவர்கள், ஜில்லென்று தண்ணீருடன் நூபுரகங்கை தீர்த்தத் தொட்டி, மாதவி மண்டபத்தின் ராக்காயி அம்மன், சலலக்கும் சிலம்பாறு, வேல்வணக்கத்தில் தொடங்கிய பழமுதிர்ச்சோலை முருக வழிபாடு இவை எல்லாம் அழகர்கோயிலின் சிறப்பு அம்சங்கள். சங்க இலக்கியங்கள் இக்கோயில் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஆறு ஆழ்வார்கள் பெருமாளை சுந்தரத் தமிழில் பாடியுள்ளார்கள். இந்த பதிவு அழகர்கோயிலைப் பற்றி..
Continue reading

Posted in கோவில், வரலாறு | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக