Tag Archives: இலிங்கம்

மதுரா அரசு அருங்காட்சியகமும் மதுரா கலை மரபும்

மதுரா அரசு அருங்காட்சியகம் (Mathura Government Museum) மதுரா கலைமரபைச் (Mathura School of Arts) சேர்ந்த பண்டைய சிற்பங்களுக்குப் புகழ்பெற்றது. இஃது உத்தரப் பிரதேச மாநிலத்தின் முக்கிய அருங்காட்சியகம் ஆகும். குஷான வம்சத்தவர்களின் (Kushan Dynasty) (கி.பி. 1 – 2 ஆம் நூற்றாண்டு) மதுரா கலை மரபைச் சேர்ந்த தொல்பொருட்கள், மிகப்பெரிய அளவில், இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. செம்பு, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களும் இந்த அருங்காட்சியகத்தின் அரிய சேகரிப்புகள் ஆகும். சுடுமண் பொம்மைகள் (Terracota Images), பண்டைய மண்பாண்டங்கள் (Ancient Pottery), களிமண் முத்திரைகள் (Clay Seals), ஓவியங்கள் மற்றும் பல பொருட்களை இங்கு காணலாம்.

கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ஏகமுக சிவலிங்கம், புத்தரின் தலை, கனிஷ்கரின் தலையற்ற உருவம், விருக்ஷா தேவி, யக்ஷி போன்ற குஷானர் காலத்துச் சிலைகள் இந்த அருங்காட்சியகத்தின் விலைமதிப்பற்ற காட்சிப் பொருளாகக் கருதப்படுகிறன. தொன்மைமிக்கத் தாய் தெய்வத்தின் சிற்பமும் (Archaic Mother Goddess), சுங்க வம்சத்தினர் (Sunga Dynasty) காலத்தைச் சேர்ந்த தட்டுகளும் (Plaques of the Sunga period) இந்த அருங்காட்சியகத்தின் சிறப்புக் காட்சிப் பொருட்கள் ஆகும். எனவே இந்த அரசு அருங்காட்சிகம் மதுராவில் கண்டிப்பாகக் காண வேண்டிய சுற்றுலாத் தலம் ஆகும். Continue reading

Posted in தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பைரவகோண குடைவரைக் கோவில்கள், ஆந்திரப் பிரதேசம்

பைரவகோண எட்டுக் குடைவரைக் கோவில்களின் .தொகுப்பாகும். இக்குடைவரைக் கோவில்கள் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், சந்திரசேகரபுரம் மண்டல், சந்திரசேகரபுரம் (Chandra Sekhara Puram) பின் கோடு 523112 நகருக்கு அருகில் அடர்ந்த நல்லமலா காட்டில் (Nallamala forest) பைரவகோண அமைந்துள்ளது. இங்கு எட்டு குடைவரைக் கோவில்கள் மாமல்லபுரம் சாயலில் அமைந்துள்ளன. இந்த எட்டுக் குடைவரைகளும் கருங்கல் குன்றின் ஒரு சரிவில் அகழப்பட்டுள்ளன. இக்குடைவரைகளில் நேர்தியாகச் செதுக்கப்பட்ட தூண்கள், கருவறை, சிற்பத்தொகுப்புகள் போன்ற கட்டிடக்கலை உறுப்புகளைக் காணலாம். பைரவகோண குடைவரைகள் மாமல்லபுரத்தின் சாயலையும் ராஷ்டிரகூடர் மற்றும் சாளுக்கியர்களின் சில சாயல்களையும் காணமுடியும். Continue reading

Posted in குடைவரைக் கோவில், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

கோட்டுக்கல் குடைவரைக் கோவில், கேரளா

கி.பி. 8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சில குடைவரைக் கோவில்களைக் கேரளாவைச் சுற்றிக் காணலாம். இந்த இந்துக் குடைவரைக் கோவில்களில் சிக்கலான கட்டிடக்கலையையோ அல்லது நுட்பமான சிற்பவேலைப்பாட்டையோ காணமுடியவில்லை. கேரளாவின் குடைவரைக் கட்டடக்கலை, தமிழ்நாட்டுக் குடைவரைக் கட்டடக்கலைப் பாரம்பரியத்திலிருந்து பரவியிருக்கலாம். இந்தக் குடைவரைகள் கேரளாவில் இரண்டு பகுதிகளில் திரண்டுள்ளன: ஒன்று பழைய சேர நாடு என்று அறியப்படும் வடகேரளம் மற்றொன்று ஆய் நாடு என்றறியப்படும் தென் கேரளம். கோட்டுக்கல் குடைவரைக் கோவில் கொல்லம் மாவட்டம், திருவனந்தபுரம் – கோட்டயம் எம்.சி. சாலையில் அமைந்துள்ளது. இந்தக் குடைவரை கோவில் கேரளக் குடைவரை கோவில் கலைப்பணியைக் கொண்டுள்ளது. கொட்டுக்கல் குடைவரை வளாகத்தில் சீரற்ற அளவில் இரண்டு குடைவரைகள் அமைந்துள்ளன. இந்தப்பதிவு இக்குடைவரைகளின் கட்டிடக்கலையமைப்பு மற்றும் வரலாறு பற்றிப் பதிவு செய்கிறது.
Continue reading

Posted in கோவில், தொல்லியல், வரலாறு, Uncategorized | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக