Tag Archives: கல்வி

பார்த்திவசேகரபுரம் செப்பேடு: ஆய் மன்னன் கோகருந்தடக்கன் நிறுவிய பார்த்தசாரதி கோவிலும் சாலையும் (குருகுலமுறை உயர்கல்வி நிறுவனம்)

பார்த்திவசேகரபுரம் பார்த்தசாரதி கோவில் (விஷ்ணுவின் கிருஷ்ண அவதாரம்), தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை வட்டம், பார்த்திவபுரத்தில் அமைந்துள்ளது. ஆய்குல மன்னன் கருநந்தடக்கன் என்னும் கோகருநந்தடக்கன் (கி.பி. 857–885) 28 ஆண்டுகள் ஆட்சி செய்தான். இம்மன்னன் முஞ்சிறை கோவில் ஊராளர் சபையினரிடம் நெல் வயலுக்கு ஈடாகக் கொடுத்து பரிவர்த்தனை வாயிலாகக் கோவில் கட்டுவதற்காகப் பெற்ற நிலத்தில், கி.பி. 857 ஆம் ஆண்டு, பார்த்தசாரதிக்குக் கோவில் கட்டினான். “ஸ்ரீ வல்லபன்”, “பார்த்திவசேகரன்” ஆகிய பட்டங்களைச் சூடிக்கொண்டிருந்த கோகருநந்தடக்கன், இந்த கிராமத்திற்கு பார்த்திவசேகரபுரம் என்று தன் பட்டப்பெயரையே சூட்டினான். காந்தளூர் சாலை சட்டதிட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு தொண்ணூற்றைந்து சட்டர்க்கு (மாணவருக்கு) ஒரு சாலையையும் (குருகுலமுறை உயர்கல்வி நிறுவனம்) உருவாக்கினான். வேதப் பயிற்சி தவிர, ஆயுதப் பயிற்சியும் இங்கு வழங்கப்பட்டது. கோவில் மற்றும் சாலை ஆகியவற்றை அமைத்த பின்னர், அவை முறையாக நடைமுறைப் படுத்துவதற்காக இம்மன்னன் திட்டமிட்டு உருவாக்கிய நிர்வாக விதிமுறைகள் ஹுஸுர் அலுவலக (பார்த்திவபுரம்) செப்பேட்டில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் சாலைகள் (கல்வி நிறுவனங்கள்) எவ்வாறு செயல்பட்டன என்பதை இச்செப்பேட்டில் இருந்து அறியலாம்.
Continue reading

Posted in கற்பிக்கும் கலை, கல்வி, கேரளா, சமஸ்கிருதம், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

இரண்டு கைகளையும் பயன்படுத்தி ஒரே நேரத்தில் எழுதும் திறன் (Ambidextrous Writing Skills): அசத்தும் மத்தியப்பிரதேசத்துப் பள்ளி மாணவர்கள்.

நம்மில் பெரும்பாலோனோர் வலது கையைப் பயன்படுத்தி எழுதி வருகிறோம். இது மிகவும் பொதுவானது தானே. இதில் என்ன புதுமை இருக்கிறது? என்றுதானே கேட்க வருகிறீர்கள். உலகின் மொத்த மக்கள் தொகையில், 13 சதவீதம் பேர், இடது கை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள் என்று ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது.  இவர்கள் இடது கையை மட்டும் பயன்படுத்தி எழுதி வருகிறார்கள். இடது கைப்பழக்கம் உள்ளவர்களுடைய மூளை விரைவாகச் செயல்படுமாம். ஐ.க்யூ லெவல் 140 க்கும் மேலே உள்ளவர்கள் எல்லோரும் இடது கைப்பழக்கம் உள்ளவர்கள்தான் என்று ஒரு ஆய்வு பதிவு செய்துள்ளது.  

மத்திய பிரதேச மாநிலம், சிங்க்ருளி மாவட்டம், புதேல என்னும் கிராமத்தில் உள்ள வீணாவாதினி பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் அனைவரும் இரண்டு கைகளையும் பயன்படுத்தி ஒரே நேரத்தில் எழுதுகிறார்கள் என்பது தான் வழக்கத்துக்கு மாறுபட்ட வினோதமான வியப்பான செய்தி. இந்தக் குழந்தைகளைப் பற்றி இந்தப் பதிவில் சொல்லப்போகிறேன். கொஞ்சம் கேட்டுவிட்டு உங்கள் கருத்தைப் பின்னூட்டத்தில் கட்டாயம் பதிவு செய்யுங்கள்.
Continue reading

Posted in அறிவுத்திறன், கற்பிக்கும் கலை, கல்வி, குழந்தைகள், மூளை வளர்ச்சி | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கனியும் மணியும் மின்னூல் செயலி: குழந்தைகளுக்கு எளிமையாகத் தமிழ் கற்பிக்கவும் வசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது

தமிழ் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் எளிய முறையிலும் மகிழ்ச்சியான சூழலிலும் கற்றுக் கொள்ள ஊடாடும் படங்கள் (Interactive images), அசையும் படங்கள் (Animated images), கலந்துரையாடல் (Discussion) எனப் பல வேறுபட்டக் கோணங்களில் தமிழைக் கற்பிக்கும் “கனியும் மணியும்”: மின்னூல் செயலி ஆகும். இந்த மின்னூலின் முதல் பதிப்பில் சிறுவர்களுக்கான 6 கதைகள் இடம் பெற்றுள்ளன. இந்தச் செயலி கடந்த ஜனவரி 17, 2019 ஆம் தேதி அன்று சிங்கப்பூரின் கேம்பல் லேன் சாலையில் நடைபெற்ற பொங்கல் விழாக் கொண்டாட்டத்தின்போது சிங்கப்பூர் அரசின் கல்வி அமைச்சகத்தில் செயல்படும் ‘தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின்’ தலைவரும், செம்பவாங் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்ரம் நாயர் வெளியிட்டார். இந்தச் செயலிக்கான உள்ளடக்க உருவாக்கத்தில் மலேசிய நாட்டைச் சேர்ந்த கனியியலாளரான முரசு நெடுமாறனும் ஆசிரியையான கஸ்தூரி இராமளிங்கமும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
Continue reading

Posted in குழந்தைகள், கைபேசி, சிறுவர் கதைகள், தமிழ் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்