Tag Archives: கல்வெட்டியல்

வயநாடு கேரளா

வயநாடு என்பது மலைமேடுகள், பள்ளத்தாக்குகள், அடர்ந்த குளிர்ச்சியான இலையுதிர் காடுகள், பச்சைபசேலென்ற கிராமப்புறங்கள், அழகான நீர்வீழ்ச்சிகள், டீ மற்றும் காஃபித் தோட்டங்கள், வனவிலங்குகளின் சரணாலயங்கள், ஏரிகள் நிறைந்த, மனதிற்கினிய சில்லென்ற பருவநிலை நிலவும், சுற்றுலாத்தலமாகும். தனது இயற்கை அழகை நிலைநிறுத்தி வைத்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் மலைமாவட்டமான வயநாடு, புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களான ஊட்டி மற்றும் மைசூருக்கு நடுவில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் சுற்றுலாப்பயணிகள் சொர்க்கம் எனலாம். இம்மலைப் பிரதேசம் எத்தகைய எழில்மிக்கது என்பதைக் காண விரும்பினால் ஒருமுறை வயநாட்டுக்கு நேரில் சென்று வாருங்களேன்! இதன்பிறகு ஆண்டுதோறும் அங்கே போய்வருவீர்கள் என்பது உறுதி.

வயநாட்டில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. முதன்முறையாக வயநாட்டுக்கு வருவோர் வயநாட்டில் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிக்குச் செல்லும் தூரம் அதிகம் என்பது தெரிந்திருக்காது. இதனால்தான் இவர்கள் பயணத்தில் நிறைய நேரம் சாலைகளிலேயே கழிந்துவிடுகிறது. சுற்றுலா மையங்களில் குறைவான நேரத்தை மட்டும் செலவிட வேண்டியுள்ளது. இவர்கள் செல்ல விரும்பும் சுற்றுலாத் தலங்களுக்கு அருகிலேயே ஹோட்டல் அல்லது ரெஸார்ட்டைத் தேர்ந்தெடுக்காமல் தொலைவில் தேர்ந்தெடுப்பதால் நிறைய நேரம் விரயமாகிறது. வயநாடு சுற்றுலாவிற்குத் திட்டமிடும்போதே வயநாட்டின் மனத்தைக் கவரும் எழில்மிகு சுற்றுலாத் தலங்கள் மற்றும் இவற்றின் அருகில் அமைந்துள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், ரிஸார்ட்டுகள் பற்றியெல்லாம் தெரிந்துகொண்டால் நேர விராயத்தைத் தவிர்க்கலாம்.

இந்தப் பதிவில் வயநாட்டின் சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ள இடங்களைக் கருத்தில் கொண்டு மூன்று முக்கியப் பகுதிகளாகப் பிரித்துத் தந்துள்ளேன். முதலாவது பகுதி சுல்தான் பத்தேரி – இங்குத் திப்புச் சுல்தானால் அழிக்கப்பட்ட சமணர்களின் ஜீனாலயம், அம்புகுத்தி மலையில் கற்காலத்தின் உன்னத நினைவு சின்னமாய்க் காட்சியளித்துக் கொண்டிருக்கும் எடக்கல் குகைகள் போன்ற வரலாற்றோடு தொடர்புடைய இடங்கள் உள்ளன. இரண்டாவது பகுதி கல்பேட்டா – இங்கிருந்து மீன்முட்டி அருவி, சூச்சிப்பாரா அருவி, கந்தப்பாரா அருவி, செம்பாரா சிகரம், பூக்கோட் ஏரி, பானாசுர சாகர் அணை எல்லாம் அருகருகே அமைந்துள்ளன. மூன்றாவது பகுதி மானந்தவாடி – பழசி ராஜாவின் மண்டபம் ஒன்று இந்நகரின் மையத்தில் அமைந்துள்ளது. Continue reading

Posted in சுற்றுலா | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இந்திய தொல்லியல் அளவீட்டு துறையின் மைசூர் அலுவலகத்தில் முடங்கிக் கிடக்கும் தமிழ் கல்வெட்டுகள் பற்றி அறிஞர்களும் பொதுமக்களும் கவலை…

தமிழ் நாட்டின் வரலாற்றை முறைப்படுத்தி எழுதுவதற்கு சங்க இலக்கியங்களும், இடைக்கால இலக்கியங்களும், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளின் தொடர்ச்சியான கல்வெட்டுகளும் பெரிதும் துணை புரிகின்றன. ஆங்கிலேய ஆட்சியின் போது கல்வெட்டுகளைப் படியெடுக்கத் தொடங்கிய பின்புதான், இருண்டு கிடந்த தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய வெளிச்சம் பரவியது. தமிழ் நாட்டின் இடைக்கால வரலாறு தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி வெளியுலகுக்கும் தெளிவாக புலப்பட்டது.

தற்பொழுது இந்திய தொல்லியல் அளவீட்டு துறை, தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, பல்கலைக்கழகங்கள் முதலான அரசு நிறுவனங்களும் பல தனியார் நிறுவனங்களும் புதிய கல்வெட்டுகளை வெளியிட்டு வருகின்றன. தனிப்பட்ட ஆய்வாளர்களும், குழுக்களும், மன்றங்களும் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொல்லியல் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் எல்லா அடிப்படைச் சான்றுகளையும் தொகுத்து ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதுவரை 28 தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இணையதள சேவை, முகநூல், மன்றங்கள், வலைத்தளங்கள் மூலம் விரைவாக செய்திகள் பரிமாறப்படுகின்றன. சில வலைத்தளங்கள் ASI நிறுவனத்தின் குறிப்பிட்ட தொடர் வெளியீடுகளை மின்தரவுகளாக மாற்றியமைத்துள்ளார்கள். அன்றாடம் புதிய கல்வெட்டுகள் கல்வெட்டுகள் கண்டறியப்பட்ட செய்திகள் நாளிதழ்களில் வெளியிடப் படுகின்றன.

ஆங்கிலேயர் நமக்கு அளித்த பொக்கிஷம் இக்கல்வெட்டுகளின் படிகள் (copies). தமிழ் நாட்டின் வரலாற்று நினைவுச் சின்னங்களையும் கல்வெட்டுகளையும் பராமரிக்கவும், கல்வெட்டுப் படிகளைப் பாதுகாக்கவும், படித்து புரிந்து கொள்ளவும், தற்காலத்துக்கு ஏற்றவாறு அந்தந்த இந்திய மொழிகளில் எழுதுவடிவமாக்கவும், பதிப்பிக்கவும் இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையும், தமிழ் நாடு அரசு தொல்லியல் துறையும் அரசு நிறுவனங்களாக ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்தப் பதிவு கடந்த 1890 ஆம் ஆண்டு முதல் அரும்பாடுபட்டு படியெடுத்து சேகரித்து, படித்து, தமிழ் எழுதுவடிவமாக்கி, ஆவணப்படுத்தப்பட்ட சுமார் 65000 தமிழக் கல்வெட்டுகளின் நிலை பற்றியது. இதற்கென பிரத்யோகமாக மைசூரில் செயல்படும் தொல்லியல் துறையின் கல்வெட்டியல் கிளை அலுவலகம் இந்த தரவுகளை முறையாகப் பராமரிக்கிறதா? சுமார் 400 ஆண்டுகள் பழைமையான இத்தரவுகள் பயன்படுத்தும் நிலையில் உள்ளனவா? 1909 ஆம் ஆண்டு முதல் இவை ஏன் நூலாக பதிப்பிக்கப்படவில்லை? 1908 ஆம் ஆண்டுவரை பதிப்பிக்கப்பட்ட நூல்களும் பிற கல்வெட்டு படி பிரதிகளும் ஆய்வாளர்கள் பயன்படுத்தும் வகையில் மின்தரவாக (digital document) கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளதா? இது போன்ற கேள்விகளுக்கு அறிஞர்கள் சொல்லும் தீர்வு என்ன? இந்தப் பதிவைப் படித்து தங்கள் மேலான கருத்துக்களை என் blog இல் பதிவிட வேண்டுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். Continue reading

Posted in தொல்லியல் | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்