Tag Archives: கள்ளழகர்

கள்ளழகர் கோயில், அழகர் கோயில்

மதுரை நகரைச் சுற்றி இயற்கை எழில் நிறைந்த இடங்கள் என்று அழகர்கோயில், புல்லூத்து, நாகதீர்த்தம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். படிக்கும் காலத்தில் அழகர்கோயிலுக்கு நான் அடிக்கடி சென்று வந்ததுண்டு. காலையில் பஸ் பிடித்து அழகர்கோயிலுக்குச் சென்று கோயில், மலை எல்லாம் சுற்றிவிட்டு மாலையில் வீடு திரும்பியதுண்டு. அப்போது அவ்வளவு கூட்டம் இல்லை; மரங்களடர்ந்த காடுகள், எங்கும் பசுமையான சூழல். ஓங்கி உயர்ந்த கோபுரம், அழகிய சிற்பங்கள் நிறைந்த மண்டபத்தூண்கள், இன்றும் அழகுறக் காட்சியளிக்கும் ஓவியங்கள், பதினெட்டாம்படிக்கருப்புக்கு பயபக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்தும் கிராமத்து மனிதர்கள், திவ்யதேச பெருமாளை சேவிக்கும் வைணவர்கள், ஜில்லென்று தண்ணீருடன் நூபுரகங்கை தீர்த்தத் தொட்டி, மாதவி மண்டபத்தின் ராக்காயி அம்மன், சலலக்கும் சிலம்பாறு, வேல்வணக்கத்தில் தொடங்கிய பழமுதிர்ச்சோலை முருக வழிபாடு இவை எல்லாம் அழகர்கோயிலின் சிறப்பு அம்சங்கள். சங்க இலக்கியங்கள் இக்கோயில் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஆறு ஆழ்வார்கள் பெருமாளை சுந்தரத் தமிழில் பாடியுள்ளார்கள். இந்த பதிவு அழகர்கோயிலைப் பற்றி..
Continue reading

Posted in கோவில், வரலாறு | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக