நாட்காட்டி
ஜூன் 2023 ஞா தி செ பு விய வெ ச 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 வருகை
- 227,395 hits
ஆர்.எஸ்.எஸ் ஓடை
-
அண்மைய பதிவுகள்
- சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்
- திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை
- திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்
- இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.
- அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
பிரிவுகள்
குறிச்சொற்கள்
- அகழ்வாய்வு
- அன்ராய்டு செயலி
- அமேசான்.காம்
- அரக்கு பள்ளத்தாக்கு
- அரசியல்
- அருங்காட்சியகம்
- அருவி
- ஆந்திரப் பிரதேசம்
- ஆய் வம்சம்
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறை
- இந்து கோவில்
- இரும்புக்காலம்
- இலக்கணம்
- இலிங்கம்
- உணவு
- கட்டிடக்கலை
- கன்னடம்
- கர்நாடகா
- கல்வி
- கல்வெட்டியல்
- கல்வெட்டுகள்
- கல்வெட்டுக்கள்
- காஃபி
- கிண்டில்
- குடைவரைக் கோவில்
- குழந்தைகள்
- கூகுள் பிளே ஸ்டார்
- கேரளா
- கைபேசி
- கோவில்
- சங்க இலக்கியம்
- சங்க காலம்
- சமணக் குகைத்தளங்கள்
- சமண சமயம்
- சமண தீர்த்தங்கரர்
- சமஸ்கிருதம்
- சிறுவர் கதைகள்
- சிவன்
- சிவலிங்கம்
- சுற்றுலாப்பயணிகள்
- செப்பேடுகள்
- செம்மொழி
- சேரர்கள்
- சோழர்
- தஞ்சாவூர்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்நாடு
- தமிழ் பிராமி
- திருப்பதி
- தொல்பொருட்கள்
- தொல்லியல்
- பல்லவர்
- பாகுபலி
- பாண்டியர்கள்
- பாதாமி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- புத்தர்
- பெரிபுளூஸ்
- பெருங்கற்காலம்
- மகாபாரதம்
- மதுரை
- மலைவாழிடம்
- மாநில தொல்லியல் துறை
- மின்னூல்கள்
- மேலைச் சாளுக்கியர் வம்சம்
- மொழி
- வட்டெழுத்து
- வணிகக் குழுவினர்
- வரலாறு
- விஜயநகரப் பேரரசு
- விஷ்ணு
- ஹம்பி
- ஹைதராபாத்
காப்பகம்
-
Join 501 other subscribers
- Follow அகரம் on WordPress.com
கூகுள் மொழிபெயர்
- https://geoloc10.geovisite.ovh/private/geocounter.js?compte=h7f4z7ky9xnt
Please do not change this code for a perfect fonctionality of your counter free visitor counter வருகையாளர்கள்
Tag Archives: கேரளா
கல்லில் பகவதி குகைக் கோவில்: கேரளாவின் எர்ணாகுளம் அருகே மெத்தலாவில் அமைந்துள்ள சமண / புத்த இயற்கைக் குகைதளம்
கல்லில் (English: Kallil Malayalam: കല്ലിൽ) சமணக் குகைக் கோவில், கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கூவப்பாடி (Malayalam: കൂവപ്പാടി) வட்டம் , மெத்தலா (Malayalam: മേത്തല) கிராமத்தில் (பின் கோடு 683545) அமைந்துள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மெத்தலா கிராமத்தை இந்தக் கிராமத்துடன் இணைத்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம். இந்தக் குகைக் கோவில், கூவப்பாடியிலிருந்து 10 … Continue reading
Posted in குகைகள், கேரளா, சமண சமயம், பெளத்த சமயம், வரலாறு
Tagged கேரளா, சமணக் குகைத்தளங்கள், தீண்டாமை, தீய்யம், பகவதி வழிபாடு, பௌத்த மதம்
5 பின்னூட்டங்கள்
பாலயூர் மகாதேவர் கோவில் (திருச்சூர் மாவட்டம், கேரளா) இடிக்கப்பட்டு அங்கு செயின்ட் தாமஸால், கி.பி. 52 ஆம் ஆண்டு, செயின்ட் தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம் கட்டப்பட்டதா?
பாலயூர் மகாதேவா கோவில் (English: Palayur Mahadeva Temple, Malayalam: പാലയൂർ മഹാദേവക്ഷേത്രം) , கேரளாவின் திருச்சூர் மாவட்டம், சாவக்காடு வட்டம் பாலயூரில் (Malayalam: പാലയൂർ) அமைந்திருந்த தொன்மை மிக்க கோவிலாகும். இந்த கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்தக் கோவில் சேர மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஆனால் இக்கோவில் இன்று இல்லை. இந்தக் கோவில் கிறிஸ்தவர்களால் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புனித தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம், கட்டப்பட்டது. இந்தச் சிரிய தேவாலயம் (English: Syrian church) கி.பி 52 ஆம் ஆண்டளவில் இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களில் (அப்போஸ்தலர்களில்) ஒருவரான செயின்ட் தாமஸால் நிறுவப்பட்டதாகக் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. இது குறித்த விரிவான பதிவு இதுவாகும்.
Continue reading
Posted in கேரளா, கோவில், சுற்றுலா, மதம், மலையாளம்
Tagged இந்து கோவில், எழரப்பள்ளி, கேரளா, சிவன், செயின்ட் தாமஸ், தேவாலயம், பாலயூர்
2 பின்னூட்டங்கள்
‘அக்னிசாட்சி (புதினம்), ‘அந்தர்ஜனம் – ஒரு நம்பூதிரிப் பெண்ணின் நினைவுகள்’ : கேரளத்து நம்பூதிரிகள் இனத்தில் நிலவிய பெண்ணடிமைத்தனம் பற்றி விவரிக்கும் இரண்டு நூல்கள் அறிமுகம்
பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகப் பெண்ணியவாதிகள், வரலாற்றின் எல்லாக் காலகட்டங்களிலும் குரல் எழுப்பியுள்ளனர். கேரளாவில் நிலவிய பெண்ணடிமைத்தனத்தைப் பற்றிப் பேசும்போது, நம்பூதிரி (கேரளத்துப் பிராமணர்கள்) இனத்தில் நிலவிய பெண்ணடிமைத்தனத்தைப் பற்றியும் ஆணாதிக்க சமுதாயம் விதித்த எண்ணற்ற அடக்குமுறைக் கட்டுப்பாடுகள் பற்றியும் கட்டாயம் பேசத்தான் வேண்டும். இளம் விதவைகள் உள்ளிட்ட நம்பூதிரிப் பெண்களின் உரிமை எவ்வாறெல்லாம் மறுக்கப்பட்டது? முதலில் இவர்கள் பெண்கள் என்பதானாலும் கேரளத்தின் உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதனாலும் வீட்டிற்குள்ளேயே அடக்கி வைத்து அடிமைப்படுத்திக் கொடுமை செய்யப்பட்டார்கள்.
கீழ்ககாணும் இரண்டு நூல்களும் ஆணாதிக்கம் மிகுந்த நம்பூதிரி வகுப்பில் நிலவிய பெண்ணடிமைக் கொடுமைகள் குறித்த விரிவான தகவல்களைப் பதிவு செய்துள்ளன.
1. லலிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதி, 1976 ஆம் ஆண்டு, வெளியிடப்பட்ட புதினமான ‘அக்னிசாட்சி,’ (അഗ്നിസാക്ഷി) (ஆங்கில மொழிபெயர்ப்பு வசந்தி சங்கரநாராயணன்) வெளியீடு Oxford University Press, 1980 பக். 208.
2. தேவகி நிலையங்கோடு எழுதி 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாழ்க்கை நினைவுக் குறிப்பான ‘அந்தர்ஜனம்: ஒரு நம்பூரிப் பெண்ணின் நினைவுகள்’ (അന്തർജനം: ഒരു നമ്പൂതിരി സ്ത്രീയുടെ ഓർമ്മക്കുറിപ്പുകൾ) (ஆங்கில மொழிபெயர்ப்பு, இந்திரா மேனன் மற்றும் ராதிகா மேனன்) வெளியீடு Oxford University Press, 2012. பக். 111
‘அக்னிசாட்சி’ என்ற புதினமும் ‘அந்தர்ஜனம்’ என்ற வாழ்க்கை நினைவுக் குறிப்பும் அக்காலத்தில் நிலவிய பெண்ணடிமை முறையினை விவரிக்கும் நேரடி சாட்சிகளாகும். நம்பூதிரிகள், சாதியின் பெயரால் தன் இனத்துப் பெண்களின் மீது விதித்த கடுமையான சாதிக்கட்டுப்பாடுகளும் அடக்குமுறையும், பெண்ணடிமை வாழ்க்கை குறித்த சமூகப் பிரச்சனைகளையும் இவர்களுடைய எழுத்துக்களில் நாம் காணலாம். Continue reading
Posted in கேரளா, பெண் விடுதலை, மலையாளம்
Tagged அந்தர்ஜனம், கேரளா, நம்பூதிரி, நூலறிமுகம், பிராமணர்கள், புதினம், பெண் விடுதலை, பெண்ணடிமைத்தனம்
6 பின்னூட்டங்கள்