Tag Archives: சிவலிங்கம்

முதலாம் ஆதித்த சோழனின் பள்ளிப்படை கோவில்: கோதண்டராமேஸ்வரா பொக்கிசம்பாளம், ஆந்திரப் பிரதேசம்

கோதண்டராமேஸ்வரா (English: Kondandaramesvara; Telugu: కోతండ రామ రాఎస్వారా) என்னும் ஆதித்தீஸ்வரா (English: Aditeesvara; Telugu: అదితిస్వారా) அல்லது ஸ்ரீ காமாட்சி சமேத கோதண்டராமேஸ்வர சுவாமி கோவில், ஆந்திரப்பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், ஸ்ரீ காளஹஸ்தி மண்டல், பொக்கிசம்பாளம் (English: Bokkasam Palem; Telugu: బొక్కసం పాలెం) பின் கோடு 517619  கிராமத்தில் அமைந்துள்ள முதலாம் ஆதித்த சோழரின் (கி.பி. 871-907) பள்ளிப்படை கோவிலாகும் (English: Sepulchre Temple).  பள்ளிப்படைக் கோவில் வழிபாடு எப்போது தொடங்கியது என்பது பற்றி நிச்சயமாகத் தெரியவில்லை. பள்ளிப்படை கோவில் என்பது பிற்காலச் சோழர்களின் காலத்தில் உயிர்நீத்த சோழ மன்னர்கள் மற்றும் இவர்கள் குடும்பத்தினர்கள், பெரும் போரில் இறந்துபோன வீரர்கள் ஆகியோரது அஸ்தியின் மீது எழுப்பப்பட்ட கோவிலைக் குறிக்கும். கல்வெட்டு பதிவுகள் இவ்வூரை தொண்டமாநாடு என்று குறிப்பிடுகின்றன.

விஜயாலய சோழனின் (கி.பி.846-881) மகனான இராஜகேசரி முதலாம் ஆதித்த சோழன் (கி.பி.871-907) கி.பி. 907 ஆம் ஆண்டு தொண்டமானாற்றூர் என்னுமிடத்தில் இறந்து போனார். இவருடைய மரணம் பற்றி “தொண்டைமானரூர் துஞ்சின உடையார்” என்ற அடைமொழியுடன் (epithet) இரண்டாம் ஆதித்த சோழனின்  14 ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட திருமால்புரம் (திருமால்பேர்) கல்வெட்டு பதிவு செய்துள்ளது. தொல்லியல் ஆய்வாளர் திரு.வெங்கய்யா இந்தத் தொண்டமானாற்றூரை ஸ்ரீ காளஹஸ்திக்கு அருகில் உள்ள தொண்டமாநாடு என்று அடையாளம் கண்டுள்ளார். இவ்வூரை திருவேங்கடக் கோட்டத்து ஆற்றூர் நாட்டு தொண்டமான் பேராற்றூர் என்று கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
Continue reading

Posted in கோவில், சோழர்கள், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

ஆலகிராமம் எமதண்டீஸ்வரம் கோவிலில் கிடைத்த கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிள்ளையார் சிற்பமே காலத்தால் முந்தையது!

விழுப்புரம் மாவட்டம், மைலம் வட்டாரத்தில் அமைந்துள்ள எமதண்டீஸ்வரர் கோவிலில்  வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்ட பீடத்துடன் கூடிய பிள்ளையாரின் புடைப்புச் சிற்பம் கல்வெட்டு ஆய்வாளர்களான வீரராகவன், மங்கையற்கரசி தம்பதியரால் கண்டறியப்பட்டது. இந்தச் சிற்பம் பலகைக் கல்லில் செதுக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பிள்ளையார் சிற்பங்களிலேயே இந்தப் பிள்ளையார் சிற்பமே காலத்தால் முந்தையது என்றும் இந்தத் தம்பதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். Continue reading

Posted in குடைவரைக் கோவில், தொல்லியல், படிமக்கலை | Tagged , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்

குடிமல்லம் பரசுராமேஸ்வரர் கோவில்: உலகின் மிகப் பழைமையான சிவலிங்கம்

மூன்று சிவலிங்கங்கள் படிமக் கலை வரலாற்றில் காலத்தால் முற்பட்டனவாகக் கருதப்படுகின்றன. இவற்றுள் ஒன்று ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம்,  ரேணிகுண்டா – பாப்பாநாயுடுபேட் அருகே குடிமல்லம் பரசுராமேஸ்வரர் கோவிலின் கருவறையில் நிறுவப்பட்டுள்ளது. இது சாதவாகனர் காலத்தைச் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச்) சேர்ந்தது ஆகும். இன்று வரை வழிபாட்டில் இருந்துவரும் சிவலிங்கமும் இதுவாகும். மற்ற இரண்டு சிவலிங்கங்களும்  குஷானர் காலத்தைச் (கி.பி. முதலாம் நூற்றாண்டைச்) சேர்ந்தனவாகும். இந்த இலிங்கங்களின் வடிவமைப்பு மற்றும் வழிபாடு போன்றவை படைப்பற்றல் சின்னமாகிய விரைகுறி வழிபாட்டுடன் (phallic worship) தொடர்புபடுத்தப்படுகின்றன. இவை வழிபாட்டில் இல்லை மாறாக அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

1. உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத் அருகே பிடா (Bhita) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு லக்னோ அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஏகமுக இலிங்கம் ஆகும். இது சிவப்புக் கல்லால் ஆனது.
2. உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே கங்கலி திலா (Kankali Tila) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு மதுரா அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள (பதிவு. எண் 83.3).பஞ்சமுக லிங்கம் ஆகும். இது சிவப்புக் கல்லால் ஆனது.

இந்தப் பதிவு குடிமங்கலம் சிவலிங்கப் படிமக்கலை பற்றியும் பரசுராமேஸ்வரர் கோவில் கட்டடக்கலை பற்றியும் விவரிக்கிறது.  Continue reading

Posted in கோவில், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , | 15 பின்னூட்டங்கள்