Tag Archives: தஞ்சாவூர்

கோவில்களில் நுந்தா விளக்கெரிப்பதற்கு முதலாம் இராஜராஜ சோழன் ஏற்படுத்திய, “சாவா-மூவா-போராடு” திட்டம்

நந்தா விளக்கு என்றால் விளக்கின் திரி தூண்டாமல் இரவும் பகலும் அணையாமல் எரியும் விளக்கு என்று பொருள். நந்தா விளக்குகள் குறித்த பல செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. சோழர்கள் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் இவ்வகை விளக்குகள் நுந்தா விளக்கு என்றும் திருநுந்தா விளக்கு என்றும் நொந்தா விளக்கு என்றும் தூண்டாமணி விளக்கு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அளித்த சிறு சிறு நிவந்தங்கள் கோவில் உண்ணாழிகைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நந்தா விளக்குகள் ஏற்றப் பயன்பட்டன.

சாவா மூவா பேராடுகள் என்றால் சாவினாலோ மூப்பினாலோ எண்ணிக்கை குறையாத ஆடுகள் என்று பொருள். முதலாம் இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றே சாவா மூவா பேராடு என்ற திட்டம் உருவாக வழிவகுத்தது. இந்தப் பதிவு .சாவா மூவா பேராடுகள் திட்டம் பற்றி விரிவாக அலசுகிறது.
Continue reading

Posted in கோவில், சோழர்கள், தொல்லியல், வரலாறு, Uncategorized | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நிசும்பசூதினி கோவில்கள், தஞ்சாவூர்: விஜயாலய சோழன் நிறுவிய சோழர்களின் போர்க்கடவுள்

தஞ்சாவூர் நகரில் கீழவாசல் பகுதியில் இரண்டு நிசும்பசூதினி கோவில்கள் அமைந்துள்ளன. திருபுறம்பியம் போரில் வெற்றிபெற்றுத் தஞ்சாவூர் நகரைக் கைப்பற்றிய பின்னர் விஜயாலய சோழன் இந்த நிசும்பசூதினி கோவிலை நிறுவினான். இந்த நிகழ்வினை திருவாலங்காட்டுச் செப்பேடு பதிவு செய்துள்ளது. இந்தப் பதிவு சோழர் வரலாறு, திருப்புறம்பியம் போர், நிசும்பசூதினி வழிபாடு, தஞ்சாவூரின் இரண்டு நிசும்பசூதினி கோவில்கள்  பற்றி விரிவாக விவரிக்கிறது. Continue reading

Posted in கோவில், சோழர்கள், வரலாறு | Tagged , , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்

தஞ்சாவூர் மராத்தா மாளிகை என்னும் தஞ்சாவூர் அரண்மனை

தஞ்சாவூர் மராத்தா மாளிகை என்னும் தஞ்சாவூர் அரண்மனை தமிழ்நாட்டின் தஞ்சாவூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை, சுமார் 480 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் சேவப்ப நாயக்கரால் தொடங்கப்பட்டு விஜயராகவ நாயக்கரால் கட்டி முடிக்கப்பட்டது. விஜய ரகுநாத நாயக்கர் காலத்தில் “விஜய விசாலம்” என்றும் “இரகுநாத விலாசம்” என்றும், விஜயராகவ நாயக்கர் காலத்தில் “விஜயராகவா விலாசம்” என்றும் இந்த அரண்மனைக்குப் பெயர் சூட்டியிருந்தனர். சாகித்ய ரத்னாகரம், ரகுநாத நாயக்கப் யூத யமு, மன்னாருதாச விலாசம், போன்ற பண்டைய நூல்கள் இந்த அரண்மனை பற்றிய செய்திகளைப் பதிவு செய்துள்ளன. சுமார் 400 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்ட இந்த அரண்மனை, காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுச் சின்னமாகக் காட்சியளிக்கிறது. இந்தப் பதிவு தஞ்சாவூர் மராத்தா மாளிகையின் வரலாறு, நினைவுச் சின்னங்கள், சுற்றுலா உள்ளிட்ட எல்லாத் தகவல்களையும் இந்தப்பதிவு விவரிக்கிறது. Continue reading

Posted in சுற்றுலா, தொல்லியல், படிமக்கலை, வரலாறு | Tagged , , , , , , | 8 பின்னூட்டங்கள்