நாட்காட்டி
ஜூன் 2023 ஞா தி செ பு விய வெ ச 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 வருகை
- 227,395 hits
ஆர்.எஸ்.எஸ் ஓடை
-
அண்மைய பதிவுகள்
- சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்
- திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை
- திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்
- இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.
- அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
பிரிவுகள்
குறிச்சொற்கள்
- அகழ்வாய்வு
- அன்ராய்டு செயலி
- அமேசான்.காம்
- அரக்கு பள்ளத்தாக்கு
- அரசியல்
- அருங்காட்சியகம்
- அருவி
- ஆந்திரப் பிரதேசம்
- ஆய் வம்சம்
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறை
- இந்து கோவில்
- இரும்புக்காலம்
- இலக்கணம்
- இலிங்கம்
- உணவு
- கட்டிடக்கலை
- கன்னடம்
- கர்நாடகா
- கல்வி
- கல்வெட்டியல்
- கல்வெட்டுகள்
- கல்வெட்டுக்கள்
- காஃபி
- கிண்டில்
- குடைவரைக் கோவில்
- குழந்தைகள்
- கூகுள் பிளே ஸ்டார்
- கேரளா
- கைபேசி
- கோவில்
- சங்க இலக்கியம்
- சங்க காலம்
- சமணக் குகைத்தளங்கள்
- சமண சமயம்
- சமண தீர்த்தங்கரர்
- சமஸ்கிருதம்
- சிறுவர் கதைகள்
- சிவன்
- சிவலிங்கம்
- சுற்றுலாப்பயணிகள்
- செப்பேடுகள்
- செம்மொழி
- சேரர்கள்
- சோழர்
- தஞ்சாவூர்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்நாடு
- தமிழ் பிராமி
- திருப்பதி
- தொல்பொருட்கள்
- தொல்லியல்
- பல்லவர்
- பாகுபலி
- பாண்டியர்கள்
- பாதாமி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- புத்தர்
- பெரிபுளூஸ்
- பெருங்கற்காலம்
- மகாபாரதம்
- மதுரை
- மலைவாழிடம்
- மாநில தொல்லியல் துறை
- மின்னூல்கள்
- மேலைச் சாளுக்கியர் வம்சம்
- மொழி
- வட்டெழுத்து
- வணிகக் குழுவினர்
- வரலாறு
- விஜயநகரப் பேரரசு
- விஷ்ணு
- ஹம்பி
- ஹைதராபாத்
காப்பகம்
-
Join 501 other subscribers
- Follow அகரம் on WordPress.com
கூகுள் மொழிபெயர்
- https://geoloc10.geovisite.ovh/private/geocounter.js?compte=h7f4z7ky9xnt
Please do not change this code for a perfect fonctionality of your counter free visitor counter வருகையாளர்கள்
Tag Archives: தொல்பொருட்கள்
திரிபுனித்துரா மலை மாளிகை (அரண்மனை) மற்றும் அருங்காட்சியகம்
திரிபுனித்துரா மலை மாளிகை (கனக்கக்குன்னு அரண்மனை), கி.பி. 1855 ஆம் ஆண்டு முதல், முந்தைய கொச்சி அரசர்களின் அரசவையாகவும் வாழ்விடமாகவும் (Royal Court and Official Residence) திகழ்ந்தது. பெரும்படப்பு ஸ்வரூபம் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் கொச்சி அரசமரபினர் மகோதயபுரம் பெருமாள்களின் (பிற்காலச் சேரர்களின்), தாய்வழி வாரிசுரிமை முறையின்படி வந்த வழித்தோன்றல்கள் ஆவர். இந்த மாளிகையின் பழைய கட்டமைப்புகள் கி.பி. 1853 மற்றும் 1864 ஆம் ஆண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டதாகும். கேரளாவின் கொச்சி நகரின் புறநகர்ப் பகுதியான திரிபுனித்துராவில் கனக்கக்குன்னு என்ற குன்றின் மீது அமைந்துள்ள இந்த மாளிகை, தற்போது கேரள மாநில தொல்லியல் துறையால் சீரமைக்கப்பட்டு, நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் முழு அளவிலான பண்பாடு மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் (Ethno-Archaeological Museum) செயல்பட்டுவருகிறது. தொன்மை மிக்க இந்த அரச மாளிகையை ஒரு அரும்பொருள் களஞ்சியம் என்று கூறலாம்.
வரலாற்றுக்கு முந்தைய காலத்துப் பூங்கா, மான் பூங்கா, கலாச்சார அருங்காட்சியகம், ஆகிய பல வசதிகளை உள்ளடக்கிய இந்த சுற்றுலாத் தலத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். புகழ்பெற்ற மலையாள திரைப்படமான மணிச்சித்ரத்தாழு இங்கே படமாக்கப்பட்டது. இதுமட்டுமின்றி பல்வேறு திரைப்படங்களும் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.
Posted in கேரளா, சுற்றுலா, வரலாறு
Tagged அரண்மனை, அருங்காட்சியகம், கேரளா, கொச்சி, சேரர்கள், திரிப்பணித்துரா, தொல்பொருட்கள், மாநில தொல்லியல் துறை
2 பின்னூட்டங்கள்
மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தற்காலிக கீழடி அருங்காட்சியகம்
தற்காலிக கீழடி அருங்காட்சியகம், மதுரை நகரில்(பின் கோடு 625020) மருத்துவர் தங்கராசு சாலையில், சட்டக் கல்லூரி அருகில், அமைந்துள்ள மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் முதல் தளத்தில் செயல்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் மதுரை உலகத் தமிழ்ச் சங்க முதலாவது தளத்தில் மூன்று அறைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முதல் இரண்டு அறைகளில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் கீழடியில் கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாம் அறையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் முப்பரிமானத் தொழில்நுட்பம் மூலம் மாதிரிகளைக் காட்சிப்படுத்தியுள்ளார்கள். இந்த அருங்காட்சியகத்தை காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் இலவசமாகக் கண்டுகளிக்கலாம். இது பற்றிய விரிவான பதிவு இதுவாகும். Continue reading
Posted in தொல்லியல், வரலாறு, Uncategorized
Tagged அகழ்வாய்வு, அருங்காட்சியகம், இந்திய தொல்லியல் அளவீட்டு துறை, கீழடி, தொல்பொருட்கள், மதுரை, மாநில தொல்லியல் துறை, வரலாறு
6 பின்னூட்டங்கள்
திருப்பத்தூர் அருகே, ஏலகிரி மலையடிவாரத்தில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பழங்கால மக்கள் வாழ்ந்த தொல்லியல் தடயங்கள் கண்டுபிடிப்பு
திருப்பத்தூருக்கு அருகே ஏலகிரி (Yelagiri) மலையடிவாரத்தில் அமைந்துள்ள குண்டுரெட்டியூர் (Gundureddiyur) கிராமத்தில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) (Sacred Hearts College (Autonomous) தமிழ்த்துறை பேராசிரியர்கள் மற்றும் சில சுய ஆர்வலர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பழங்கால மக்கள் வாழ்ந்ததாகக் கருதப்படும், “தொழிற்சாலை குடியிருப்பு (வாழ்வியல்) மேட்டைக்” (Industrial settlement Mound) கண்டறிந்துள்ளனர். திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி (Sacred Hearts College (Autonomous) தமிழ்த்துறை பேராசிரியர்கள் தலைமையில் சுயஆர்வலர்கள் இடம்பெற்ற தொல்லியல் குழுவினர் குண்டுரெட்டியூர் கிராமப் பகுதிகளையொட்டி வழக்கமான களப்பணி மேற்கொண்டபோது இந்தத் தொல்பழங்கால மனிதர்களின் வாழ்வியல் மேடு கண்டறியப்பட்டது. இது பற்றிய விரிவான செய்தியினைத் தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ளது. Continue reading
Posted in தொல்லியல்
Tagged இரும்புக்காலம், ஏலகிரி, சுடுமண் குழாய்கள், திருப்பத்தூர், தொல்பொருட்கள், தொல்லியல், பானை ஓடுகள், புதிய கற்காலம்
6 பின்னூட்டங்கள்