நாட்காட்டி
ஜூன் 2023 ஞா தி செ பு விய வெ ச 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 வருகை
- 227,395 hits
ஆர்.எஸ்.எஸ் ஓடை
-
அண்மைய பதிவுகள்
- சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்
- திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை
- திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்
- இரண்டாம் சேர வம்சத்தின் வரலாறு: சேரமான் பெருமாள்கள், குலசேகரர்கள், மகோதயபுரம் சேரர்கள்.
- அழகர்கோயில், தொ.பரமசிவன். நூலறிமுகம்
பிரிவுகள்
குறிச்சொற்கள்
- அகழ்வாய்வு
- அன்ராய்டு செயலி
- அமேசான்.காம்
- அரக்கு பள்ளத்தாக்கு
- அரசியல்
- அருங்காட்சியகம்
- அருவி
- ஆந்திரப் பிரதேசம்
- ஆய் வம்சம்
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறை
- இந்து கோவில்
- இரும்புக்காலம்
- இலக்கணம்
- இலிங்கம்
- உணவு
- கட்டிடக்கலை
- கன்னடம்
- கர்நாடகா
- கல்வி
- கல்வெட்டியல்
- கல்வெட்டுகள்
- கல்வெட்டுக்கள்
- காஃபி
- கிண்டில்
- குடைவரைக் கோவில்
- குழந்தைகள்
- கூகுள் பிளே ஸ்டார்
- கேரளா
- கைபேசி
- கோவில்
- சங்க இலக்கியம்
- சங்க காலம்
- சமணக் குகைத்தளங்கள்
- சமண சமயம்
- சமண தீர்த்தங்கரர்
- சமஸ்கிருதம்
- சிறுவர் கதைகள்
- சிவன்
- சிவலிங்கம்
- சுற்றுலாப்பயணிகள்
- செப்பேடுகள்
- செம்மொழி
- சேரர்கள்
- சோழர்
- தஞ்சாவூர்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தமிழ்நாடு
- தமிழ் பிராமி
- திருப்பதி
- தொல்பொருட்கள்
- தொல்லியல்
- பல்லவர்
- பாகுபலி
- பாண்டியர்கள்
- பாதாமி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்
- புத்தர்
- பெரிபுளூஸ்
- பெருங்கற்காலம்
- மகாபாரதம்
- மதுரை
- மலைவாழிடம்
- மாநில தொல்லியல் துறை
- மின்னூல்கள்
- மேலைச் சாளுக்கியர் வம்சம்
- மொழி
- வட்டெழுத்து
- வணிகக் குழுவினர்
- வரலாறு
- விஜயநகரப் பேரரசு
- விஷ்ணு
- ஹம்பி
- ஹைதராபாத்
காப்பகம்
-
Join 501 other subscribers
- Follow அகரம் on WordPress.com
கூகுள் மொழிபெயர்
- https://geoloc10.geovisite.ovh/private/geocounter.js?compte=h7f4z7ky9xnt
Please do not change this code for a perfect fonctionality of your counter free visitor counter வருகையாளர்கள்
Tag Archives: புத்தர்
கடாரம் 2: புஜாங் பள்ளத்தாக்கு தொல்லியல் தளங்கள் மற்றும் அருங்காட்சியகம்
பண்டைத்தமிழர் கடல்சார் வணிகம், ஸ்ரீவிஜய பேரரசின் கடல்சார் வணிக ஏகபோகம், கடற்பகுதியையும் கடல் வணிகத்தையும் பாதுகாப்பதற்காக முதலாம் இராஜேந்திர சோழன் தென்கிழக்காசிய நாடுகள் மீது படையெடுப்பு மேற்கொண்டு பதின்மூன்று தென்கிழக்காசிய நாடுகளை வென்ற செய்தி; மலேசிய நாட்டின் கெடா மாநிலம், கெடா துவா (Kedah Tua) என்னும் பகுதியில் கி,மு. 535 ஆம் ஆண்டுகளில், தழைத்தோங்கி பண்டைய நாகரிகம், கி.பி 1936 -1937 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள், இங்குக் கண்டறியப்பட்ட சண்டி என்னும் வழிப்பாட்டுக் கட்டமைப்புகள், தொல்லியல் சின்னங்கள், உடைந்த சிற்பங்கள் பற்றியெல்லாம் முதல் பதிவில் கூறியிருந்தேன்.
கெடா மாநிலத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற லெம்பா புஜாங் (Lembah Bujang) பகுதி கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே விரைவான வளர்ச்சியை எவ்வாறு அடைந்தது? இப்பகுதி பாதுக்கப்பட்ட வரலாற்றுத் தளங்களில் ஒன்றாக மாறியது ஏன்? எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது? இது போன்ற கேள்விகளுக்கான விடை இந்த இரண்டாம் பதிவில் இடம்பெற்றுள்ளது. இந்து பெளத்த வழிபாட்டுத் தலங்களாகிய சண்டிகளும் தொல்பொருட்களும் இங்கு கண்டறியப்பட்டன. இந்த நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட லெம்பா புஜாங் தொல்லியல் அருங்காட்சியகம் பற்றியும் இப்பதிவு விவரிக்கிறது.
இது கடாரம் பற்றிய இரு பதிவுகள் கொண்ட தொடராகும்.
கடாரம் 1: சோழர் நிலைநாட்டிய கடல் வணிக மேலாதிக்கம், அகழ்வாய்வுகள் மெய்பிக்கும் கெடா துவா நாகரிகம்
கடாரம் 2: புஜாங் பள்ளத்தாக்கு தொல்லியல் தளங்கள் மற்றும் அருங்காட்சியகம்
இத்தொடரின் இரண்டாம் பதிவு இதுவாகும். Continue reading
Posted in கோவில், சுற்றுலா, தொல்லியல்
Tagged அகழ்வாய்வு, அருங்காட்சியகம், கடாரம், கல்வெட்டியல், கெடா, கெடா துவா, சண்டி, தாங்குதளம், தொல்லியல், புஜாங் பள்ளத்தாக்கு, புத்தர், மண்டபம், மலேசியா, விமானம்
2 பின்னூட்டங்கள்
கடாரம் 1: சோழர் நிலைநாட்டிய கடல் வணிக மேலாதிக்கம், அகழ்வாய்வுகள் மெய்பிக்கும் கெடா துவா நாகரிகம்
பண்டைத் தமிழ் வணிகர்கள் தொடக்கத்தில் மரக்கலங்களில் இந்தோனேசிய தீவுகளுக்கும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கும் சென்று கடல்சார் வணிகம் மேற்கொண்டனர். அரேபியர்கள் வாசனைப் பொருட்களைத் தமிழர்களிடமிருந்து பெற்று மேற்குலக நாடுகளுக்குக் கொண்டு சென்றனர். பின்னாட்களில் தமிழர்கள் நீண்ட கடற்பயணம் மேற்கொண்டு சீனாவுடன் கடல்சார் வணிகம் மேற்கொண்டனர். சீனத்துப் பண்டங்களை ரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்தார்கள். கடல்சார் வணிகமும் கடற்பரப்பும் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
கி.பி. 6 ஆம் நூற்றண்டில் தென்கிழக்காசியாவின் ஸ்ரீவிஜய பேரரசு சீன நாட்டு வாணிகம் தங்கள் மூலம்தான் நடக்கவேண்டும் என வணிகக் கட்டுப்பாடுகள் விதித்தது. கடற்பகுதியையும் கடல் வணிகத்தையும் பாதுகாப்பதற்காக முதலாம் இராஜேந்திர சோழன் தென்கிழக்காசிய நாடுகள் மீது படையெடுத்தான் பதின்மூன்று தென்கிழக்காசிய நாடுகளை வென்று தமிழர்களின் கடல்சார் வணிக மேலாதிக்கத்தை நிலைநாட்டியதால் கடாரம் கொண்டான் என்ற விருதுப்பெயர் பெற்றான்.
இராஜேந்திர சோழன் வென்ற கடாரம், மலேசிய நாட்டின் கெடா மாநிலத்தில் அமைந்துள்ள பூஜாங் பள்ளத்தாக்குப் பகுதியாகும். இது மிகத் தொன்மையான மாநிலம் ஆகும். கெடா துவா (Kedah Tua) என்னும் பண்டைய நாகரிகம் கி,மு. 535 ஆம் ஆண்டுகளில் கெடாவில் தழைத்தோங்கி இருந்தது. இது தென்கிழக்காசியாவின் மிகத்தொன்மையான நாகரிகம் ஆகும். கெடா துவா நாகரிகம், ஜாவாவில் கி.பி. 9 நூற்றண்டில் நிலவிய போரோபுதூர் (Borobudur) நாகரிகத்திற்கும், கம்போடியாவில் கி.பி. 12 ஆம் நூற்றண்டில் நிலவிய அங்கோர்வாட் நாகரிகத்திற்கும் முந்தையது என்று இப்பகுதியில் 1936 -1937 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் நிரூபித்து வருகின்றன. இங்குக் கண்டறியப்பட்ட சண்டி என்னும் வழிப்பாட்டுக் கட்டமைப்புகள், தொல்லியல் சின்னங்கள், உடைந்த சிற்பங்கள் எல்லாம் இந்து மற்றும் பெளத்த சமய நாகரிகத்தின் தாக்கங்களை உறுதிப் படுத்துகின்றன. இது கடாரம் பற்றிய இரு பதிவுகள் கொண்ட தொடராகும்.
கடாரம் 1: சோழர் நிலைநாட்டிய கடல் வணிக மேலாதிக்கம், அகழ்வாய்வுகள் மெய்பிக்கும் கெடா துவா நாகரிகம்
கடாரம் 2: புஜாங் பள்ளத்தாக்கு தொல்லியல் தளங்கள் மற்றும் அருங்காட்சியகம்
இத்தொடரின் முதல் பதிவு இதுவாகும். Continue reading
Posted in கோவில், சுற்றுலா, தொல்லியல்
Tagged அகழ்வாய்வு, அருங்காட்சியகம், கடாரம், கல்வெட்டியல், கெடா, கெடா துவா, சண்டி, சோழர், தொல்லியல், புஜாங் பள்ளத்தாக்கு, புத்தர், மலேசியா, முதலாம் இராஜராஜ சோழன், ஸ்ரீவிஜய பேரரசு
8 பின்னூட்டங்கள்
மதுரா அரசு அருங்காட்சியகமும் மதுரா கலை மரபும்
மதுரா அரசு அருங்காட்சியகம் (Mathura Government Museum) மதுரா கலைமரபைச் (Mathura School of Arts) சேர்ந்த பண்டைய சிற்பங்களுக்குப் புகழ்பெற்றது. இஃது உத்தரப் பிரதேச மாநிலத்தின் முக்கிய அருங்காட்சியகம் ஆகும். குஷான வம்சத்தவர்களின் (Kushan Dynasty) (கி.பி. 1 – 2 ஆம் நூற்றாண்டு) மதுரா கலை மரபைச் சேர்ந்த தொல்பொருட்கள், மிகப்பெரிய அளவில், இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. செம்பு, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களும் இந்த அருங்காட்சியகத்தின் அரிய சேகரிப்புகள் ஆகும். சுடுமண் பொம்மைகள் (Terracota Images), பண்டைய மண்பாண்டங்கள் (Ancient Pottery), களிமண் முத்திரைகள் (Clay Seals), ஓவியங்கள் மற்றும் பல பொருட்களை இங்கு காணலாம்.
கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ஏகமுக சிவலிங்கம், புத்தரின் தலை, கனிஷ்கரின் தலையற்ற உருவம், விருக்ஷா தேவி, யக்ஷி போன்ற குஷானர் காலத்துச் சிலைகள் இந்த அருங்காட்சியகத்தின் விலைமதிப்பற்ற காட்சிப் பொருளாகக் கருதப்படுகிறன. தொன்மைமிக்கத் தாய் தெய்வத்தின் சிற்பமும் (Archaic Mother Goddess), சுங்க வம்சத்தினர் (Sunga Dynasty) காலத்தைச் சேர்ந்த தட்டுகளும் (Plaques of the Sunga period) இந்த அருங்காட்சியகத்தின் சிறப்புக் காட்சிப் பொருட்கள் ஆகும். எனவே இந்த அரசு அருங்காட்சிகம் மதுராவில் கண்டிப்பாகக் காண வேண்டிய சுற்றுலாத் தலம் ஆகும். Continue reading
Posted in தொல்லியல், வரலாறு
Tagged அருங்காட்சியகம், இலிங்கம், குசானர், குப்தர், சமண தீர்த்தங்கரர், சுடுமண் சிற்பம், புத்தர், மதுரா, மௌரியர்
4 பின்னூட்டங்கள்