Tag Archives: பெரிபுளூஸ்

சங்க இலக்கியத்தில் சோழர்களின் உறையூர்

காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள உறையூர் கி.மு. 3 ஆம் நூற்றண்டில் இருந்தே சங்க காலத்துச் சோழர்களின் தலைநகராகத் திகழ்ந்துள்ளது. தித்தன், கரிகால் சோழன், ,குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், குராப்பள்ளி துஞ்சிய பெருந்திருமாவளவன், ஆகிய சோழர் கோமரபைச் சேர்ந்த மன்னர்கள் பல்வேறு காலகட்டங்களில் உறையூரினைத் தொடர்ச்சியாக ஆட்சி செய்து வந்துள்ளதை சங்க இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன..இந்நகரம் ஒரு செழிப்பான வணிக மையமாகவும் திகழ்ந்துள்ளது. Continue reading

Posted in சோழர்கள், தமிழ், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சங்க இலக்கியத்தில் கொற்கை முத்து, முத்துக்குளித்தல், கடல் வணிகம் பற்றிய செய்திகள்

சங்க இலக்கியம் மற்றும் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் பண்டைய தமிழகத்தில் பாண்டிய நாட்டின் கொற்கைத் துறையில் கிடைத்த உலகப் புகழ்பெற்ற முத்துக்கள் பற்றியும் இப்பகுதியில் செழித்தோங்கிய முத்துக்குளித்தல் தொழில்  பற்றியும் ரோம் மற்றும் அரேபிய நாடுகளுக்கு முத்து ஏற்றுமதியானது குறித்தும் பதிவு செய்துள்ளன. இந்தப்பதிவில் முத்து பற்றிய வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்து வழங்க ஒரு சிறு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களைப் பின்னூட்டத்தில் பதிவு செய்ய வேண்டுகிறேன். Continue reading

Posted in தமிழ், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

எரித்திரியக் கடலின் பெரிபுளூஸ்: பெரிபுளூஸ்ஸின் கடற்பயணக் குறிப்புகளில் பண்டைய தமிழகம்

எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ் (Periplus of the Erythraean Sea) என்ற கையெழுத்து ஆவணம் (manuscript document) பண்டைய ரோமின் கடல் சார்ந்த வர்த்தகம் (Maritime Trade) (அதாவது, செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடல்) குறித்த மிகவும் இன்றியமையாத ஒற்றைத் தகவல் மூலமாகும் (single most important source of information). ஒரு கடற்கரையோரமாகக் கப்பலின் தலைமை மாலுமியின் என்னவெல்லாம் எதிர்பார்க்கக்கூடும் என்று கணித்து அங்குள்ள துறைமுகங்கள் மற்றும் கடலோர நிலப்பகுதிகளுக்கு இடையிலான தோராயமான தூரம் ஆகியவற்றை இந்த ஆவணம் பட்டியலிடுகிறது. அந்த அர்த்தத்தில், பெரிபுளூஸ் ஒரு வகையான பதிவு எனலாம். இந்த ஆவணம் கிழக்கு ஆப்பிரிக்கா (eastern Africa), தென் அரேபியா (southern Arabia) மற்றும் இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரங்களில் பல்வேறு துறைமுகங்களில் வாங்குவதற்கும் விற்பதற்குமான ரோம எகிப்தின் (Roman Egypt) செங்கடல் துறைமுகத்திலிருந்து வந்தவர்களுக்கான ஒரு சிறிய கையேடு எனலாம்.

இந்தக் கையெழுத்து ஆவணம் எரித்திரிய (செங்கடலைச்) கடலைச் சுற்றி கிரேக்க மொழி பேசும் எகிப்திய வணிக மாலுமிகளால் கிரேக்க நாட்டிலிருந்து அரபிக்கடல் வழியாகப் தென்மேற்குப் பருவக்காற்றைப் பயன்படுத்தி வரும் பாய்மரக் கப்பலில் மேற்கொள்ளப்பட்ட கடற்பயணத்தை விவரிக்கிறது. இந்தக் குறிப்புகள் அந்தக் காலத்திய இந்தியத் தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரைத் துறைமுகங்கள், கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் மற்றும் கங்கையாற்றுச் சமவெளி பற்றி எல்லாம் விவரிக்கின்றன. Continue reading

Posted in தமிழ், தமிழ்நாடு, தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்