Tag Archives: பெளத்தம்

கான்ஹெரீ பெளத்த குடைவரைகள், கிழக்கு போரிவலி, மும்பை

மும்பை சுற்றுப் பகுதிகளில் அமைந்துள்ள பௌத்த குகைகளைக் காண ஆர்வம் உள்ளதா? நீர்வீழ்ச்சி, ஏரிகள், பறவைகள், விலங்குகள், மரம் செடிகொடி நிறைந்த அடர்வனப் பகுதியில் உங்கள் விடுமுறையைக் கழிக்க விருப்பமா? கவலை வேண்டாம்!. மும்பை போரிவலி கிழக்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவும் (संजय गाँधी राष्ट्रीय उद्यान) பூங்காவின் மையத்தில் உள்ள கான்ஹெரீ பெளத்த குடைவரை வளாகமும் (कान्हेरी गुफाएँ)  உங்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கான சிறந்த தேர்வு ஆகும்.

கான்ஹெரீ 109 பௌத்த குடைவரைகள் அடங்கிய வளாகம் ஆகும். கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தப் பழமையான குடைவரைகளைப் பௌத்த துறவிகள், கிருஷ்ண சைலா (அல்லது கன்ஹ சைலா) என்ற செங்குத்துப் பாறையை அகழ்ந்து உருவாக்கியுள்ளார்கள். இந்த 109 குடைவரைகளில் பெரும்பாலானவை சிறிய அளவில் அமைக்கப்பட்ட அறைகள் ஆகும். இவை பெளத்த விகாரைகள் (विहार) என்றழைக்கப்பட்டன. இங்கு வாழ்ந்த பெளத்த துறவிகள் விகாரைகளை உறைவிடமாகவும், பயிலுமிடமாகவும், தவமியற்றும் இடமாகவும்  பயன்படுத்தி உள்ளனர். விகாரைகள் மட்டுமின்றிப் பெரிய அளவில் காணப்படும், பொது வழிபாட்டிற்கான, குடைவரைகள் சைத்தியம் (चैत्य)  என்று அழைக்கப்பட்டன. பெளத்த சைத்தியங்கள், துறவிகள் ஒன்றிணைந்து கூட்டாக வழிபடவும், பெளத்த இறையியல் (Buddhist Theology) பயிலவும் பயன்பட்டன. அரை வட்ட (குதிரை லாட) வடிவில் அழகிய தூண்களுடன் அமைக்கப்பட்ட சில சைத்திய மண்டபங்களில் (Colonades) ஸ்தூபிகள், வடிவமைக்கப்பட்டுள்ளன. சிறிதும் பெரிதுமாகப் பல ஸ்தூபிகளை இங்கு காணலாம். சைத்தியங்களில் புடைப்புச் சிற்பத் தொகுப்புகள், மாபெரும் புத்தர் சிற்பங்கள் (Colossal Buddha Statues) எல்லாம் வடிவமைக்கப்பட்டுள்ளன. பல கல்வெட்டுகளும் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. Continue reading

Posted in குடைவரைக் கோவில், தொல்லியல், பெளத்த சமயம் | Tagged , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

பாதாமி: புத்தர் குகைத்தளம், அனந்தசயன விஷ்ணு கோவில், கப்பெ அரபட்டா கல்வெட்டு

பாதாமியில் நாம் கண்ட இந்த நான்கு குடைவரைக் கோவில்களைத் தவிர, வேறு சில இயற்கைக் குகைகளும் இடைக்காலத்தைச் சேர்ந்த கற்கோவில்களும் உள்ளன. முன்பு நாம் பார்த்த அகஸ்தியர் தீர்த்த  குளத்தையொட்டி கிழக்குத் திசையில் பூதநாதா கோவில்களின் தொகுதியின் அருகே கி.பி. 7 – 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறிய அளவில் அமைந்த சாளுக்கியர் காலத்து இயற்கைக் குகைத்  தளம் ஒன்று காணப்படுகிறது. இதனை அடுத்து ஒரு சிறிய கோவில் ஒன்று அனந்தசயன விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனந்தசயன விஷ்ணு பாம்பணையில் சயனித்த நிலையில் புடைப்புச் சிற்பமாகக் காட்டப்பட்டுள்ளார். பூதநாதா தீர்த்தக் குளத்திற்குப் போகும் வழியில் மணற்பாறை  ஒன்றில் வராஹர், கணேசர், மும்மூர்த்திகள், மகிஷாசுரமர்த்தினி, நரசிம்மர் ஆகியோர் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளனர். பாதாமியின் வடக்குக் கோட்டைப் படிக்கட்டையொட்டி  சற்றுத் தொலைவில் செங்குத்தான பாறையில் கப்பெ அரபட்டா (Kappe Arabhatta) என்ற பெயருடன் கன்னடக் கல்வெட்டு செய்யுள் பொறிக்கப்பட்டுள்ளது. Continue reading

Posted in தொல்லியல், பெளத்த சமயம், மதம் | Tagged , , , , , , | 12 பின்னூட்டங்கள்