Tag Archives: ரேணாட்டு சோழன்

கலமல்லா தெலுங்கு கல்வெட்டும் தெலுங்கு மொழியின் செம்மொழித் தகுதியும்

தெலுங்கு மொழியில் புகழ்பெற்றதாக அறியப்பட்ட கல்வெட்டுகளில் களமல்லா கல்வெட்டு ரேணாட்டு சோழன் எரிகல் முத்துராசு தனஞ்செயன் வர்மா என்ற மன்னன் காலத்தியது ஆகும்.. ஆந்திரப் பிரதேச மாநிலம், ஒய்.எஸ்.ஆர். மாவட்டம், எர்ரகுண்டலா மண்டல், களமல்லா கிராமத்தில் சென்னகேசவப் பெருமாள் கோவிலில் கண்டறியப்பட்ட உடைந்த தூணில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டைத் தற்போது காணவில்லை. இக்கல்வெட்டின் எழுத்தமைதியை ஆய்ந்தபின் இதன் காலம் கி.பி. 575 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாயிருக்கலாம் என்று கல்வெட்டாய்வாளர்கள் நம்புகிறார்கள். தெலுங்கு மொழியைச் செம்மொழி (Classical language) என்று, வகைப்படுத்தித் தகுதி வழங்க இக்கல்வெட்டை இந்தியாவின் மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு (Union Ministry for Culture, Government of India), சான்று ஆவணமாகச் சமர்ப்பித்தனர்.மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சகம் தெலுங்கிற்கான செம்மொழி வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின்படி 2008 நவம்பர் மாதத்தில் தெலுங்கைச் செம்மொழியாக அறிவித்தது.
Continue reading

Posted in தொல்லியல், மொழி | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்