Tag Archives: வூட்ஸ் எஃகு

தமிழகத்தின் இரும்புக் காலம்: 1 சங்க இலக்கியத்தில் இரும்பு எஃகு தொழில் நுட்ப அறிவு

மனித நாகரீகத்தின் முன்னேற்றத்தை கற்கால நாகரீகத்திலிருந்து உலோக கால நாகரீகத்திற்கு (Iron Age Civilization) நகர்த்திய உலோகங்களில் இரும்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. கொஞ்சம் இரும்புத் தாது நெருப்பில் விழுந்து உருகிக் குளிர்ந்து கட்டி இரும்பான (Wrought Iron) போது  ஆதிமனிதனால்  இந்த உலோகம் கண்டறியப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் நினைக்கிறார்கள். இரும்பு இவர்களின் வாழ்க்கையை எளிதாக்கியது உண்மை. இரும்பினால் செய்யப்பட்ட  செய்யப்பட்ட ஆயுதங்களும் கருவிகளும் திறம்படப் பயன்பட்டன.

ஆதிமனிதன் பயன்படுத்திய கற்கருவிகளைக் கொண்டு கற்காலத்தைப் பழைய கற்காலம் (கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்), புதிய கற்காலம் (கி.மு. 10,000 – கி.மு. 4,000 வரை) எனப் பிரித்தார்கள்.  புதிய கற்கால நாகரீகதிற்குப் பிறகு உலோககால  (பொற்காலம், செம்புக்காலம், இரும்புக்காலம்) நாகரீகம் தோன்றியது.

தமிழகத்தில் கி.மு. 500 ஆம் ஆண்டளவில் இரும்பு அறிமுகமாகியிருக்கலாம். கொடுமணல், மேல்சிறுவலூர், குட்டூர், ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு  போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் தமிழகத்தின் இரும்புக் காலகட்டத்தை வரையறை செய்ய உதவுகின்றன. சங்க இலக்கியம் மற்றும் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் தமிழகத்தில் இரும்புத் தொழில்துறை செழித்தோங்கியது பற்றியும் ரோம் மற்றும் எகிப்து நாடுகளுக்கு இரும்பும் எஃகும் ஏற்றுமதியானது குறித்தும் பதிவு செய்துள்ளன. பண்டைய ரோமானிய ஆவணங்கள் சங்ககாலத்துத் தமிழகத்தின் சேர நாட்டிலிருந்து எஃகு இறக்குமதி செய்யப்பட்டது குறித்தும் பதிவு செய்துள்ளன. இது தமிழகத்தின் இரும்புக் காலம் பற்றிய இரண்டு பதிவுகள் கொண்ட தொடர் ஆகும்:
Continue reading

Posted in தமிழ், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , , , | 15 பின்னூட்டங்கள்