Tag Archives: கட்டிடக்கலை

பைரவகோண குடைவரைக் கோவில்கள், ஆந்திரப் பிரதேசம்

பைரவகோண எட்டுக் குடைவரைக் கோவில்களின் .தொகுப்பாகும். இக்குடைவரைக் கோவில்கள் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், சந்திரசேகரபுரம் மண்டல், சந்திரசேகரபுரம் (Chandra Sekhara Puram) பின் கோடு 523112 நகருக்கு அருகில் அடர்ந்த நல்லமலா காட்டில் (Nallamala forest) பைரவகோண அமைந்துள்ளது. இங்கு எட்டு குடைவரைக் கோவில்கள் மாமல்லபுரம் சாயலில் அமைந்துள்ளன. இந்த எட்டுக் குடைவரைகளும் கருங்கல் குன்றின் ஒரு சரிவில் அகழப்பட்டுள்ளன. இக்குடைவரைகளில் நேர்தியாகச் செதுக்கப்பட்ட தூண்கள், கருவறை, சிற்பத்தொகுப்புகள் போன்ற கட்டிடக்கலை உறுப்புகளைக் காணலாம். பைரவகோண குடைவரைகள் மாமல்லபுரத்தின் சாயலையும் ராஷ்டிரகூடர் மற்றும் சாளுக்கியர்களின் சில சாயல்களையும் காணமுடியும். Continue reading

Posted in குடைவரைக் கோவில், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

கோட்டுக்கல் குடைவரைக் கோவில், கேரளா

கி.பி. 8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சில குடைவரைக் கோவில்களைக் கேரளாவைச் சுற்றிக் காணலாம். இந்த இந்துக் குடைவரைக் கோவில்களில் சிக்கலான கட்டிடக்கலையையோ அல்லது நுட்பமான சிற்பவேலைப்பாட்டையோ காணமுடியவில்லை. கேரளாவின் குடைவரைக் கட்டடக்கலை, தமிழ்நாட்டுக் குடைவரைக் கட்டடக்கலைப் பாரம்பரியத்திலிருந்து பரவியிருக்கலாம். இந்தக் குடைவரைகள் கேரளாவில் இரண்டு பகுதிகளில் திரண்டுள்ளன: ஒன்று பழைய சேர நாடு என்று அறியப்படும் வடகேரளம் மற்றொன்று ஆய் நாடு என்றறியப்படும் தென் கேரளம். கோட்டுக்கல் குடைவரைக் கோவில் கொல்லம் மாவட்டம், திருவனந்தபுரம் – கோட்டயம் எம்.சி. சாலையில் அமைந்துள்ளது. இந்தக் குடைவரை கோவில் கேரளக் குடைவரை கோவில் கலைப்பணியைக் கொண்டுள்ளது. கொட்டுக்கல் குடைவரை வளாகத்தில் சீரற்ற அளவில் இரண்டு குடைவரைகள் அமைந்துள்ளன. இந்தப்பதிவு இக்குடைவரைகளின் கட்டிடக்கலையமைப்பு மற்றும் வரலாறு பற்றிப் பதிவு செய்கிறது.
Continue reading

Posted in கோவில், தொல்லியல், வரலாறு, Uncategorized | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

லெபாக்ஷி

விஜயநகரப் பேரரசு லெபாக்ஷியில் வீரபத்திரர் கோவிலைக் கட்டியுளார்கள். இந்தக் கோவிலினுள் சிவன், விஷ்ணு, வீரபத்திரர் ஆகிய தெய்வங்களுக்குச் சிறு கோவில்களைக் கட்டியுளார்கள. இங்குள்ள வீரபத்ரர் கோவில் மட்டும் கலைநயம் வாய்ந்தது. மற்ற கோவில்கள் அளவில் சிறிய கோவிகள் என்று சொல்லலாம். கூர்மசைலம் (ஆமை வடிவில் அமைந்த மலை) என்று பெயரில் வழங்கப்படும் சிறிய குன்றின் மேல் அமைந்த கோவில் வளாகத்திற்குள் பாபநாதீஸ்வர, ரகுநாதர், ஸ்ரீராமர், துர்க்கை ஆகிய தெய்வங்களுக்குக் கோவில்கள் உள்ளன.  இவற்றுள் லெபாக்ஷியில் கட்டப்பட்டுள்ள வீரபத்திரர் கோவில் புகழ்பெற்ற விஜயநகரக் கட்டிடக்கலை சகாப்தத்தில் ஒரு மைல்கல் எனலாம். விஜயநகரப் பேரரசு கட்டிடக்கலையின் உன்னத நிலையில் இருந்தபோது அமைத்த நேர்த்தியான சிற்பங்களையும் ஓவியங்களையும் காண்பதற்காக லெபாக்ஷிக்குச் செல்வது சிறப்புமிக்கது. Continue reading

Posted in கோவில், சுற்றுலா | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக