Tag Archives: சிவன்

பாலயூர் மகாதேவர் கோவில் (திருச்சூர் மாவட்டம், கேரளா) இடிக்கப்பட்டு அங்கு செயின்ட் தாமஸால், கி.பி. 52 ஆம் ஆண்டு, செயின்ட் தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம் கட்டப்பட்டதா?

பாலயூர் மகாதேவா கோவில் (English: Palayur Mahadeva Temple, Malayalam: പാലയൂർ മഹാദേവക്ഷേത്രം) , கேரளாவின் திருச்சூர் மாவட்டம், சாவக்காடு வட்டம் பாலயூரில் (Malayalam: പാലയൂർ) அமைந்திருந்த தொன்மை மிக்க கோவிலாகும். இந்த கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்தக் கோவில் சேர மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆனால் இக்கோவில் இன்று இல்லை. இந்தக் கோவில் கிறிஸ்தவர்களால் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புனித தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம், கட்டப்பட்டது. இந்தச் சிரிய தேவாலயம் (English: Syrian church) கி.பி 52 ஆம் ஆண்டளவில் இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களில் (அப்போஸ்தலர்களில்) ஒருவரான செயின்ட் தாமஸால் நிறுவப்பட்டதாகக் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. இது குறித்த விரிவான பதிவு இதுவாகும்.
Continue reading

Posted in கேரளா, கோவில், சுற்றுலா, மதம், மலையாளம் | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மஸ்ரூர் ஒற்றைக் கற்றளிகள்: நாகரா பாணி குடைவரைக் கோவில் வளாகம்

இமயமலையின் தௌலதார் மலைத்தொடரின் பியாஸ் நதி பாயும் நிலப்பரப்பில் உள்ள ஓர் அழகிய குன்றின் உச்சியில் மஸ்ரூர் ஒற்றைக் கற்றளிகள் என்னும் வகையிலான குடைவரைக் கோவில்கள் (Masrur Monolithic Rock-cut Temples, also known as Masroor Monolithic Rock-cut Temples) அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குடைவரைக் கோவில் ஒற்றைக்கல்லில் அகழப்பட்ட கோவில் தொகுதி ஆகும். இக்கோவில் அருமை அழகுடன் உங்களைக் கவர்ந்திழுக்கும் ஓர் இடமாகும். இஃது இமயமலையின் பிரமிடு என்று, இப்பகுதி மக்களால், அன்புடன் அழைக்கப்படுகிறது.

இக்கோவில்கள் இந்தோ-ஆரிய கலைப்பாணியில் (Indo-Aryan Style), நாகரா கட்டடக்கலை மரபில் (Nagara Architectural Tradition) அகழப்பட்ட 15 குடைவரைக் கோவில்களின் தொகுதி (Group of 15 Rock-cut Temples) ஆகும். இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் மிகவும் அறியப்படாத கோவில்களில் ஒன்றான இது, தனித்துவம் மிக்க ஒற்றைக்கல் கட்டுமானம் ஆகும். இஃது இந்தியாவின் முக்கியமான குடைவரைக் கோவில்களில் ஒன்றாக எண்ணப்படுகிறது. மாமல்லபுரத்தின் ஐந்து இரதங்கள் (ஒற்றைக்கல் மண்டபங்கள்), இராஷ்டிரகூட மன்னன் முதலாம் கிருஷ்ணனால் அகழப்பட்ட எல்லோரா 16 ஆம் குகை எண் கொண்ட கைலாசநாதர் கோவில், தர்மநாத் கோவில், தம்மர் (Dharmanath temple at Dhammar) (இராஜஸ்தான்) போன்ற குடைவரைக் கோவில்களுக்கு இணையாக மஸ்ரூர் கோவில் தொகுதி   எண்ணப்படுகிறது. Continue reading

Posted in குடைவரைக் கோவில், கோவில், சுற்றுலா, படிமக்கலை | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

குடிமல்லம் பரசுராமேஸ்வரர் கோவில்: உலகின் மிகப் பழைமையான சிவலிங்கம்

மூன்று சிவலிங்கங்கள் படிமக் கலை வரலாற்றில் காலத்தால் முற்பட்டனவாகக் கருதப்படுகின்றன. இவற்றுள் ஒன்று ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம்,  ரேணிகுண்டா – பாப்பாநாயுடுபேட் அருகே குடிமல்லம் பரசுராமேஸ்வரர் கோவிலின் கருவறையில் நிறுவப்பட்டுள்ளது. இது சாதவாகனர் காலத்தைச் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச்) சேர்ந்தது ஆகும். இன்று வரை வழிபாட்டில் இருந்துவரும் சிவலிங்கமும் இதுவாகும். மற்ற இரண்டு சிவலிங்கங்களும்  குஷானர் காலத்தைச் (கி.பி. முதலாம் நூற்றாண்டைச்) சேர்ந்தனவாகும். இந்த இலிங்கங்களின் வடிவமைப்பு மற்றும் வழிபாடு போன்றவை படைப்பற்றல் சின்னமாகிய விரைகுறி வழிபாட்டுடன் (phallic worship) தொடர்புபடுத்தப்படுகின்றன. இவை வழிபாட்டில் இல்லை மாறாக அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

1. உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத் அருகே பிடா (Bhita) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு லக்னோ அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஏகமுக இலிங்கம் ஆகும். இது சிவப்புக் கல்லால் ஆனது.
2. உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே கங்கலி திலா (Kankali Tila) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு மதுரா அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள (பதிவு. எண் 83.3).பஞ்சமுக லிங்கம் ஆகும். இது சிவப்புக் கல்லால் ஆனது.

இந்தப் பதிவு குடிமங்கலம் சிவலிங்கப் படிமக்கலை பற்றியும் பரசுராமேஸ்வரர் கோவில் கட்டடக்கலை பற்றியும் விவரிக்கிறது.  Continue reading

Posted in கோவில், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , , | 15 பின்னூட்டங்கள்