Tag Archives: வணிகக் குழுவினர்

பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோவில்: திசையாயிரத்து ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினர் கல்வெட்டு

கொடுங்குன்றநாதர் கோவில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், பிரான்மலை பின் கோடு 630502 கிராமத்தில் அமைந்துள்ளது. பாண்டிய நாட்டுத் தேவாரப் பதிகளில் ஐந்தாவதாகக் கருதப்படும் கொடுங்குன்றநாதர் கோவில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் கடையெழு வள்ளல்களில் புகழ்பெற்ற வேள்பாரி என்ற வேளிர் குடிப்பிறந்த குறுநிலமன்னன் ஆட்சி செய்த இப்பகுதிக்குப் பறம்பு நாடு என்று பெயர். இவன் பறம்பு … Continue reading

Posted in தமிழ், தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

கிருஷ்ணபட்ணம் சித்தேஸ்வரசுவாமி கோவிலில் ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினர் பற்றிய விரிவான தகவலுடன் கல்வெட்டுகள்

ஆந்திரப் பிரதேச மாநிலம், எஸ்.பி.எஸ்.ஆர் நெல்லூர் மாவட்டம், முதுக்கூர் மண்டலில், வங்கக் கடற்கரையை ஒட்டி, அமைந்துள்ள சிறு கிராமம் கிருஷ்ணபட்ணம் (Telugu: కృష్ణ పట్నం) பின் கோடு 524344 ஆகும். இவ்வூர் தனியாரால் கட்டமைக்கப்பட்டுத் தனியாருக்குச் சொந்தமான கிருஷ்ணபட்ணம் துறைமுகம் ஆகும். Krishnapatnam Port Company Limited (KPCL) என்ற பெயரில் பிரபலமாக அறியப்படும் இத்துறைமுகம், ஆழமிக்கதும் எல்லாப் பருவநிலைகளுக்கும் ஏற்றதுமான துறைமுகம் ஆகும்.

இந்தக் கிராமம், ஒரு காலத்தில் பன்னாட்டுத்  துறைமுகபட்டணமாகத் திகழ்ந்தது என்பதை நம்புவது சற்று கடினம்தான். தூர கிழக்கு நாடுகள் (far-eastern) மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் நிலைபெற்றிருந்த பேரரசுகளுடன் (south-eastern Asian empires) விரிவான வணிகம் மேற்கொண்ட  பன்னாட்டு வணிகர் குழுவினரின் (International Merchant-Guilds) துறைமுகப்பட்டணமாகக் கிருஷ்ணபட்ணம் விளங்கியது என்பது சற்று வியப்பான செய்திதான். இவ்வூரில் சித்தேஸ்வரருக்கு  அர்ப்பணிக்கப்பட்ட, கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. மனும சித்தேஸ்வரம் (Manuma-Siddhisvaram) என்ற பெயருடன் இக்கோவில் திகழ்ந்துள்ளது. Continue reading

Posted in தொல்லியல், மேலாண்மை, வரலாறு | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

சோழர் காலத்து திசை ஆயிரத்து ஐநூற்றுவர் வணிகக் குழுவினர் கல்வெட்டு புதுக்கோட்டை அருகே கண்டறியப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் செல்லுகுடி கிராமத்தில், எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் மரபுக் கழக உறுப்பினர்கள் செல்லுகுடிக்குச் சுற்றுலா சென்றபோது கண்டறியப்பட்டு, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகக் (Pudukkottai Archeological Research Forum) குழுவினரால் படித்தறியப்பட்ட “திசையாயிரத்து ஐநூற்றுவர்” (Thisaiyaarathu Ainootruvar) என்னும் வணிககுழுவினர் (Merchant’s Guild) பற்றிய சோழர் காலத்துத் தூண் கல்வெட்டு தொல்லியல் ஆர்வலர்களிடையே மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது பற்றிச் செப்டம்பர் 19, 2018 தேதி  நாளிதழ்களில் விரிவான செய்தி வெளியாகியுள்ளது. Continue reading

Posted in சோழர்கள், தொல்லியல் | Tagged , , , , , , | 12 பின்னூட்டங்கள்