Tag Archives: சுற்றுலாப்பயணிகள்

சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, பீமேஸ்வரி சாகச விளையாட்டு மற்றும் இயற்கை முகாம்: கர்நாடகாவில் காவிரிக்கரை சுற்றுலா

காவிரியை அதன் கரையோரமாகவே சென்று முழுவதும் பார்த்துவிட வேண்டும் என்ற அவாவில் உந்தப்பட்டு, தி ஜானகிராமன், சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) ஆகிய இரண்டு எழுத்தாளர்கள் தலைக்காவிரி நோக்கிக் காரில் பயணம் மேற்கொண்டனர். இவர்களுடைய பயண அனுபவங்களைக் கட்டுரை நூலாகத் தொகுத்து “நடந்தாய்; வாழி, காவேரி!” என்ற தலைப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூலை வாசித்த பின்னர் எப்படியாவது இந்த சிவசமுத்திரம் நீர் வீழ்ச்சியைப் பார்த்துவிடவேண்டும் என்ற வேட்கையில் ஒருநாள் பயணமாகச் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, பீமேஸ்வரி காவிரி வனவிலங்கு சரணாலயம் மற்றும் மீன்பிடி முகாம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வந்தோம். இந்தப் பயணம் பற்றிய பதிவு இதுவாகும். Continue reading

Posted in சுற்றுலா | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

இராமோஜி ஃபிலிம் சிட்டி, ஹைதராபாத்

நீங்கள் உங்கள் வார விடுமுறையை முழுமையாகச் செலவிட்டு ஓய்வெடுக்கவோ அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அற்புதமான நேரத்தைச் செலவிடவோ அல்லது உங்கள் புது மனைவியுடன் தேன்நிலவு செல்லவோ விரும்புகிறீர்களா? ராமோஜி ஃபிலிம் சிட்டியில், உங்களுடைய எதிர்பார்ப்பிற்கு மேலாகவே, நீங்கள் விரும்பிய எல்லாவற்றையும் சிறப்பாக அனுபவித்து மகிழலாம்.

இராமோஜி ஃபிலிம் சிட்டி அல்லது இராமோஜி திரைப்பட நகரம் (Ramoji Film City) 1996 ஆம் ஆண்டில் இராமோஜி குழுமத்தால் (Ramoji Group of Companies) திட்டமிட்டு அமைக்கப்பட்ட மிகப்பெரிய திரைப்பட நகரம் ஆகும். ஹைதராபாத் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில், 674 ஹெக்டேர் (1666 ஏக்கர்) பரப்பளவில், உலகத் தரத்துடன் கூடிய திரைப்படத் தயாரிப்பு வசதிகளுடன், பரந்து விரிந்த இந்தத் திரைப்பட நகரம் மில்லியன் கனவுகள் நகரம் (Land of Million Dreams) என்று விவரிக்கப்படுகிறது. ஆரவாரமிக்க பகட்டான அமைவிடம், அழகான நிழற்சாலைகள், தத்ரூபமான திரைப்படச் செட்டுகள் மற்றும் தலைசிறந்த உள்கட்டமைப்புகளுடன் கூடிய சாலைகள் மற்றும் பல தலைப்புகளில் அமைந்த பூங்காக்கள் (Theme Parks on Various Subjects) எல்லாம் இந்த வளாகத்தைத் திரைப்படத் தயாரிப்பளர்களின் மிகப்பெரிய சொர்க்கம் என்றும் சித்தரிக்கிறார்கள்.

இந்தச் செல்லுலாய்டு வளாகத்தில் நுழைந்தால் கனவுகள், கற்பனை உலகங்கள், எல்லாம் உருமாற்றம் பெற்றுத் திரைப்படங்களாக்கும் வித்தையை நேரிடையாகக் காணலாம். உங்களுடைய குழந்தை உள்ளமும், ரசிகத்தன்மையையும், உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் தயாரிக்கும் ஆர்வமும் இங்குள்ள பல திரைப்படச் செட்டுகளுடன் ஒன்றுவதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள். சுற்றுலாப் பயணிகள் மற்றும் சினிமா இரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் பல இந்த அற்புதமான இடங்களை நீங்கள் இந்த வளாகத்தில் காணலாம். Continue reading

Posted in சுற்றுலா, திரைப்படம் | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

சிலா தோரணம்: திருமலா திருப்பதி மலையில் 160 கோடி ஆண்டுகள் பழைமையான பாறைப் படிமம்

சிலா தோரணம் (Telugu: సిలా తిరోనం English: Silathoranam) என்பது இரண்டு கற்பாறைகள் இயற்கையாகத் தோரண வடிவில் பாலம் போல் இணைந்து அமைந்துள்ள அபூர்வமான பாறை ஆகும். “சிலா” என்றால் “கல்,” “தோரணம்” என்றால் “வளைவு” என்றும் பொருள். சிலா தோரணம் என்றால் இயற்கையாக அமைந்த அபூர்வமான பாறை ஆகும். இந்த சிலா தோரணம் ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், திருமலா (Telugu: తిరుమల) பின் கோடு 517504 நகரிலிருந்து 600 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் தேசிய புவியியல் நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். இதன் அமைவிடம் 13º41’9.56″ N அட்சரேகை 79º20’26.52″ E தீர்க்கரேகை ஆகும். கடல்மட்டத்திலிருந்து இதன் உயரம் 976 மீ. (3,202 அடி) ஆகும்.

சிலாதோரணத்தைக் காண்பதற்குச் செல்ல நல்ல சாலை வசதி உள்ளது. ஆட்டோ மற்றும் ஜீ போன்ற வாகனங்கள் வாடகைக்குக் கிடைக்கும். நடந்து செல்ல விரும்பினால் வராகீஸ்வரர் கோவிலிலிருந்து நடந்து செல்வதற்கு 15- 20 நிமிடங்கள் வரை ஆகலாம். Continue reading

Posted in கோவில், சுற்றுலா | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்