Tag Archives: தமிழ்

திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்

திருநாதர் குன்று என்னும் சிறுகடம்பூர் குன்று, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சிறுகடம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள தொன்மைமிக்க சமணத் தலமாகும். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் சமண சமயம் இப்பகுதியில் செழித்தோங்கி இருந்தது. இந்தச் சமண நினைவுச்சின்னம் பலராலும் நன்கு அறியப்பட்ட சமண சமய யாத்திரைத் தலமாகும். இங்குள்ள சமண தீர்த்தங்கரர்களின் திறந்தவெளி சமணச் சிற்ப அரங்கமும், கல்வெட்டுகளும் புகழ்பெற்றவை ஆகும். AASAI / REACH அறக்கட்டளை நடத்தி வரும் தமிழ் கல்வெட்டுப் பயிற்சி பாடத்திட்டத்தின் ஆறாவது தொகுதியை (Batch) சேர்ந்த மாணவர்கள் 2016 பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று களப் பயணம் மேற்கொண்டனர், இப்பயணத்தில் திருநாதர் குன்றும் அடங்கும். Continue reading

Posted in குகைகள், சமண சமயம், சுற்றுலா, தமிழ்நாடு, தொல்லியல், படிமக்கலை | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆயிஷா நடராஜன்: பலராலும் நன்கு அறியப்பட்ட குழந்தைகள் எழுத்தாளர்

ஆயிஷா இரா.நடராஜன் என்னும் இரா.நடாராஜன் புகழ் பெற்ற குழந்தைகள் எழுத்தாளர் ஆவார். இவருடைய குழந்தைகளுக்கான சிறு கதைகள் உலகளாவிய வாசகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. தமிழ் மொழியில் இவரால் எழுதப்பட்ட பல சிறுகதைகள் ஆங்கிலம், ஃபிரெஞ்ச், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் எழுதிய சில கதைகள் உலகச் சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவருடைய நான்கு கதைகள் குறும்படமாக எடுக்கப்பட்டு பன்னாட்டுத் திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்றுள்ளன. Continue reading

Posted in இலக்கியம், குழந்தைகள் | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, தொல்லியல் நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலா

புதுக்கோட்டையின் வரலாறு தென்னிந்திய வரலாற்றிற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இம்மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் நார்த்தாமலை, செவலூர் மலை மற்றும் அன்னவாசல் மலை ஆகிய மலைகளும் (Hills) தனிக்குன்றுகளும் (Knolls) ஆங்காங்கே காணப்படுகின்றன.. இங்கிருந்து நிலப்பரப்பு தட்டையாக கிழக்கு நோக்கிச் சரிகிறது. கிழக்கில் கழிமுகங்களும் நீண்ட கடற்கரையும் அமைந்துள்ளது.

புதுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருங்கற்கால ஈமக்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. சமணர்களின் தொன்மைமிக்க பல நினைவுச் சின்னங்கள் இந்த மாவட்டத்தில் சிதறிக் கிடக்கின்றன. இம்மாவட்டத்தில் அமைந்துள்ள சோழர்கள் – பாண்டியர் கலைப்பாணியில் அமைந்த கருங்கற்றளிகள் தனித்தன்மை வாய்ந்தவை. ஒரே பதிவில் இந்த மாவட்டத்தின் சிறப்புகளைப் பதிவு செய்வது மிகவும் கடினமான பணி. இதன் காரணமாகவே இந்தப் பதிவு சற்று விரிவாக அமைந்துள்ளது. Continue reading

Posted in குகைகள், குடைவரைக் கோவில், கோவில், சமண சமயம், சுற்றுலா, தமிழ்நாடு, தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்