Tag Archives: புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, தொல்லியல் நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலா

புதுக்கோட்டையின் வரலாறு தென்னிந்திய வரலாற்றிற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இம்மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் நார்த்தாமலை, செவலூர் மலை மற்றும் அன்னவாசல் மலை ஆகிய மலைகளும் (Hills) தனிக்குன்றுகளும் (Knolls) ஆங்காங்கே காணப்படுகின்றன.. இங்கிருந்து நிலப்பரப்பு தட்டையாக கிழக்கு நோக்கிச் சரிகிறது. கிழக்கில் கழிமுகங்களும் நீண்ட கடற்கரையும் அமைந்துள்ளது.

புதுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருங்கற்கால ஈமக்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. சமணர்களின் தொன்மைமிக்க பல நினைவுச் சின்னங்கள் இந்த மாவட்டத்தில் சிதறிக் கிடக்கின்றன. இம்மாவட்டத்தில் அமைந்துள்ள சோழர்கள் – பாண்டியர் கலைப்பாணியில் அமைந்த கருங்கற்றளிகள் தனித்தன்மை வாய்ந்தவை. ஒரே பதிவில் இந்த மாவட்டத்தின் சிறப்புகளைப் பதிவு செய்வது மிகவும் கடினமான பணி. இதன் காரணமாகவே இந்தப் பதிவு சற்று விரிவாக அமைந்துள்ளது. Continue reading

Posted in குகைகள், குடைவரைக் கோவில், கோவில், சமண சமயம், சுற்றுலா, தமிழ்நாடு, தொல்லியல், வரலாறு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சோழர் காலத்து திசை ஆயிரத்து ஐநூற்றுவர் வணிகக் குழுவினர் கல்வெட்டு புதுக்கோட்டை அருகே கண்டறியப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் செல்லுகுடி கிராமத்தில், எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் மரபுக் கழக உறுப்பினர்கள் செல்லுகுடிக்குச் சுற்றுலா சென்றபோது கண்டறியப்பட்டு, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகக் (Pudukkottai Archeological Research Forum) குழுவினரால் படித்தறியப்பட்ட “திசையாயிரத்து ஐநூற்றுவர்” (Thisaiyaarathu Ainootruvar) என்னும் வணிககுழுவினர் (Merchant’s Guild) பற்றிய சோழர் காலத்துத் தூண் கல்வெட்டு தொல்லியல் ஆர்வலர்களிடையே மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது பற்றிச் செப்டம்பர் 19, 2018 தேதி  நாளிதழ்களில் விரிவான செய்தி வெளியாகியுள்ளது. Continue reading

Posted in சோழர்கள், தொல்லியல் | Tagged , , , , , , | 12 பின்னூட்டங்கள்

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில்

திருமயம் என்னும் திருமெய்யம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒர் ஊராகும். இவ்வூரை நோக்கிப் பயணிக்கும்போது பல கி.மீ. தொலைவிலேயே இங்குள்ள அழகான மலைக்கோட்டையைக் காணலாம். இவ்வூரின் தென்புறமாக அமைந்துள்ள மலைச் சரிவில் இரண்டு குடைவரைக் கோவில்கள் அகழப்பட்டுள்ளன. கிழக்குப்புறம் அகழப்பட்டுள்ள குடைவரையில் திருமெய்யர் என்ற பள்ளிக்கூட பெருமாள் கிடந்த நிலையில் காட்சி தருகிறார். பிற்காலத்தில் இக்குடைவரையை … Continue reading

Posted in கோவில் | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்