Tag Archives: பெண்கல்வி

சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்

சாவித்திரிபாய் ஜோதிராவ் ஃபூலே (Savitribai Jyotirao Phule) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்பது நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்தச் சமூக சீர்திருத்தவாதி, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இவர் தன் கணவர் ஜோதிராவ் கோவிந்த ஃபூலேயுடன் இணைந்து இந்தியாவில் பெண்களின் உரிமைக்காகவும் கல்விக்காகவும் போராடுவதில் முக்கிய பங்கு வகித்தார். மகாராஷ்டிர சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் முக்கியமான நபராக இவர் கருதப்படுகிறார். இதன் காரணமாகவே இவரை “முதல் தலைமுறையைச் சேர்ந்த நவீன இந்திய பெண்ணியவாதி” என்றும் “இந்தியப் பெண்ணியத்தின் தாய்” என்றும் “ராஷ்டிரமாதா” (தேசத்தின் தாய்) என்றும் குறிப்பிடப்படுகிறார். இந்தத் தம்பதியினர் 1848 ஆம் ஆண்டில் புனே நகரின், பிடே வாடா பகுதியில் முதல் பெண்கள் பள்ளியை நிறுவினர். பத்தொன்பதாம் நூற்றண்டில் வாழ்ந்த இவர் முன்னோடி பெண்ணியவாதியும், சமுதாய மறுமலர்ச்சியாளரும், கல்வியாளரும் கவிஞரும் ஆவார். பல இந்தியர்களுக்கு, குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு, இந்தத் தம்பதியைப் பற்றித் தெரியவில்லை என்பது வருந்தத்தக்கதாகும். Continue reading

Posted in கற்பிக்கும் கலை, பெண்ணியம் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்