சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர்

சாவித்திரிபாய் ஜோதிராவ் ஃபூலே (Savitribai Jyotirao Phule) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்பது நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்தச் சமூக சீர்திருத்தவாதி, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இவர் தன் கணவர் ஜோதிராவ் கோவிந்த ஃபூலேயுடன் இணைந்து இந்தியாவில் பெண்களின் உரிமைக்காகவும் கல்விக்காகவும் போராடுவதில் முக்கிய பங்கு வகித்தார். மகாராஷ்டிர சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் முக்கியமான நபராக இவர் கருதப்படுகிறார். இதன் காரணமாகவே இவரை “முதல் தலைமுறையைச் சேர்ந்த நவீன இந்திய பெண்ணியவாதி” என்றும் “இந்தியப் பெண்ணியத்தின் தாய்” என்றும் “ராஷ்டிரமாதா” (தேசத்தின் தாய்) என்றும் குறிப்பிடப்படுகிறார். இந்தத் தம்பதியினர் 1848 ஆம் ஆண்டில் புனே நகரின், பிடே வாடா பகுதியில் முதல் பெண்கள் பள்ளியை நிறுவினர். பத்தொன்பதாம் நூற்றண்டில் வாழ்ந்த இவர் முன்னோடி பெண்ணியவாதியும், சமுதாய மறுமலர்ச்சியாளரும், கல்வியாளரும் கவிஞரும் ஆவார். பல இந்தியர்களுக்கு, குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு, இந்தத் தம்பதியைப் பற்றித் தெரியவில்லை என்பது வருந்தத்தக்கதாகும்.

Continue reading
Posted in கற்பிக்கும் கலை, பெண்ணியம் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

திருப்பரங்குன்றம் குகைத்தளங்கள், குடைவரைக் கோவில்கள்: தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பார்வை

திருப்பரங்குன்றம் என்னும் ஆன்மீகச் சுற்றுலா நகரம், சமணம் மற்றும் சைவ மதத்தைச் சேர்ந்த பல வழிபாட்டுத் தலங்களையும் தொல்லியல் நினைவுச்சின்னங்களையும் உள்ளடக்கியுள்ளது. இது இஸ்லாமியர்களின் யாத்திரைத் தலமும் ஆகும். சங்ககாலம் முதல், வரலாறு மற்றும் தொல்லியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ள இவ்வூர் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்தில் அமைந்துள்ளது. எண்பெருங்குன்றங்கள் என்னும் சமணர்கள் வாழ்ந்த குன்றுகளில் ஒன்று திருப்பரங்குன்றம் ஆகும். லிங்க வடிவில் அமைந்த இம்மலையின் வடமேற்குப் பகுதியில் உள்ள அமண்பாழி அருகே உள்ள ஒரு குகைததளத்தில் சமணர் கற்படுக்கைகளும், மூன்று தமிழ் பிராமி கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

மலையடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவிலருகில் அமைந்துள்ள சுனையை ஒட்டியுள்ள பாறையில் மூன்று சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மலையுச்சியில், காசி விசுவநாதர் கோவிலையொட்டி அமைந்துள்ள மச்சமுனி சன்னதி அருகேயுள்ள பாறையில் கி.பி 8 – 9 ம் நூற்றாண்டைச் சார்ந்த இரண்டு சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சுனையையொட்டி அமைந்துள்ள திண்டில் தமிழ் பிராமி கல்வெட்டு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மலையின் தென்பகுதியில் (தென்பரங்குன்றம்), உமை ஆண்டார் குடைவரைக் கோவில் உள்ளது. சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கருவறை, ஒரு குடைவரைக் கோவிலாகும். இங்கு குடைவரைகள் அகழப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி,, துர்காதேவி, கற்பக விநாயர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய ஐந்து தெய்வங்களுக்குச் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையனின் (கி.பி. 765-815) படைத்தலைவனான சாத்தன் கணபதி என்பவன் இக்குடைவரைக் கோவிலைச் சிவனுக்காக எழுப்பியதாக ஒரு கல்வெட்டுச் செய்தி பதிவு செய்துள்ளது. இது முருகனின் அறுபடை வீடுகளுள் முதல்வீடு என்று கந்தபுராணம் கூறுகிறது.

Continue reading
Posted in குடைவரைக் கோவில், சமண சமயம், தொல்லியல், மதுரை, வரலாறு | Tagged , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

திருநாதர் குன்று: திறந்தவெளி பாறைச் சிற்பங்கள், தனிச்சிற்பம், கல்வெட்டுகள்

திருநாதர் குன்று என்னும் சிறுகடம்பூர் குன்று, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சிறுகடம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள தொன்மைமிக்க சமணத் தலமாகும். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் சமண சமயம் இப்பகுதியில் செழித்தோங்கி இருந்தது. இந்தச் சமண நினைவுச்சின்னம் பலராலும் நன்கு அறியப்பட்ட சமண சமய யாத்திரைத் தலமாகும். இங்குள்ள சமண தீர்த்தங்கரர்களின் திறந்தவெளி சமணச் சிற்ப அரங்கமும், கல்வெட்டுகளும் புகழ்பெற்றவை ஆகும். AASAI / REACH அறக்கட்டளை நடத்தி வரும் தமிழ் கல்வெட்டுப் பயிற்சி பாடத்திட்டத்தின் ஆறாவது தொகுதியை (Batch) சேர்ந்த மாணவர்கள் 2016 பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று களப் பயணம் மேற்கொண்டனர், இப்பயணத்தில் திருநாதர் குன்றும் அடங்கும்.

Continue reading
Posted in குகைகள், சமண சமயம், சுற்றுலா, தமிழ்நாடு, தொல்லியல், படிமக்கலை | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக